தீண்டாமையால் தகப்பனை இழந்த பெண்ணின் அழுகுரலை கேட்க முடியவில்லை.
காதைப்பொத்திக்கொள்கிறேன்!
சாதியின் ஆதிக்கத்தால் வண்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்க்க
முடியவில்லை.
கண்ணை மூடிக்கொள்கிறேன்!
சாதி தொழிலான மலக்குழிக்குள் இறங்கி உயிர்விடும் மனிதனின் துர்நாற்றத்தை தாங்க
முடியவில்லை!
மூக்கை மூடிக்கொள்கிறேன்!
மொத்தத்தில் சாதியின் கொடுமை கேட்க எனக்கு வக்கில்லை!
வாயை மூடிக்கொள்கிறேன்!
ஏனெனில், இறந்த தகப்பன் என் மாமனில்லை!
ஏனெனில், வன்புணரப்பட்ட பெண் என் தங்கையில்லை!
ஏனெனில், மலக்குழிக்குள் இறந்தவன் என் அண்ணனில்லை!
சாதி தரும் பாதுக்காப்பை நான் பாதுகாக்க விரும்புகிறேன். ஆகவே கள்ள மௌனம் “சாதி”க்கிறேன்!
நான் திருவாளர் பொதுசனம்!
-
Rajarajan RJ
No comments:
Post a Comment