Wednesday 19 August 2020

தி.மு.க 360° – கலைஞரின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களும், சமூக மறுமலர்ச்சியும் - Vetri Selvan, B.E,PMP

 தி.மு. 360° – கலைஞரின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களும், சமூக மறுமலர்ச்சியும் - Vetri Selvan, B.E,PMP

ரு சமூகத்தின் வளர்ச்சியை, பெண்களின் முன்னேற்றத்தை கொண்டே மதிப்பிடுவேன்என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார். இப்படி அம்பேத்கார் காட்டிய வழியில் பயணித்து பெண்களின் வளர்ச்சிக்கு பலதிட்டங்களை தீட்டியும் ,வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியதும் திராவிட இயக்கம் ஆகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ,சமூகத்தின்  ஒருங்கிணைந்த வளர்ச்சியில், பெண்களின் பங்கும் இருக்கவேண்டும் என்று திட்டங்களை தீட்டியவர் டாக்டர் காலைஞர். பெண்களின் வளர்சிக்கு பலதிட்டங்களை திராவிட இயக்கத்தின் சார்பில் கலைஞர் கொண்டு வந்திருக்கிறார். அவற்றுள் 5 முக்கிய ,பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களை குறிப்பிடவேண்டுமானால் , கீழ்காணும் திட்டங்களை குறிப்பிடலாம்.


  • ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை
  • வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு
  • மகளிர்மன்றம்
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவிதிட்டம்
  • முத்துலெட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு உதவிதிட்டம்

சொத்துரிமை

ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை என்கிற முன்னெடுப்பு என்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல்சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை ,விவாகரத்துஉரிமை என்று பெண்களின் உரிமைகளை காக்க ஹிந்துசட்டத்தை (Hindu Code Bill) கொண்டுவர அம்பேத்கார் மிகவும் போராடினார். நேரு அம்பேதகரை இழக்கதயராக இருந்தாரே ஒழிய, ஹிந்துசட்டத்தை நிறைவேற்ற முயலவில்லை. விளைவு 1951 அம்பேத்கார் பதவியை ராஜினாமா செய்யவேண்டி இருந்தது.

இப்படி  பெரியாரின் கனவை, அம்பேத்கர் சாதிக்க நினைத்ததை , 1989 ஆண்டு , மேமாதம் , 6ம் நாள் நிறைவேற்றிக் காட்டினார் கலைஞர். ஆம், 1989-90 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ,ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்கும்சட்டம் ஒருமனதாக நிறைவேறியது. அப்போது பேசிய கலைஞர்எந்த ஒரு சமூகமறுமலர்ச்சியும் ,பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாதுஎன்று குறிப்பிடுகிறார். ஆயிரம் வருடங்களாக பார்பனீயத்தால் மறுக்கப்பட்ட உரிமையை பெண்களுக்கு சட்டத்தின் மூலம்மீட்டுக் கொடுத்தார் தலைவர் கலைஞர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

கல்விதான் ஒருவரை உயர்த்தும், பெண்கள் கல்வி கற்றால்தான் சமூகம் மறுமலர்ச்சி பெரும். கல்வியின் மீது தீராத தாகம் இருந்தததால் தான் அண்ணல் அம்பேத்காரால் இவ்வளவு படிக்கமுடிந்தது. கல்வியின்  முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான்திராவிட இயக்க முன்னோடிகளான டிம்.எம்நாயர், நடேசமுதலியார் , பன்னிர்செல்வம் , பெரியார் போன்றவர்கள், நம்மக்களுக்கு கல்வி கிடைக்க அரும்பாடுபட்டனர். இப்படிப்பட்ட பிண்ணனி கொண்ட திராவிட இயக்கத்தில் இருந்துவந்த கலைஞர் சும்மா இருப்பாரா? 1989ம் ஆண்டு மே மாதம் 2ம்நாள், வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ள குடும்பங்களையும், நடுத்தரவர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பபள்ளிமுதல் , பட்டப்படிப்புவரை இலவசகல்வி வழங்கும் ஈ.வெ.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார்இந்ததிட்டத்தின் நோக்கம் என்பது வறுமை அல்லது பணம் இல்லாததால் பெண்களின் கல்வி தடைபட்டுவிட  கூடாது என்பதாகும். இதன்மூலம் 1991 ல் 51.3% இருந்த பெண்களின் கல்வியறிவு விகிதம், 2011ல் 73.4 % ஆக அதிகரித்தது. 22% வளர்ச்சி.

சரி ,படித்தாகிவிட்டது, வேலைக்கு என்ன செய்வது என்பதற்கான விடைதான் கலைஞர் கொண்டுவந்த, அரசுவேலைவாய்ப்பில்  பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான  பெண்கள் இந்த இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப்பணிகளில் சேர்ந்தனர். வேலைக்கு செல்லும் பெண்கள் எங்கு தங்குவார்கள் என்கிற கேள்வி எழலாம். இதற்காக பெண்கள் விடுதியை (Working Women Hostel) சென்னை ,புதுக்கோட்டை , கடலூர் , திருச்சி , மதுரை , ஓசூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் ஏற்படுத்தினார். இதோடு நிற்காமல், பெண்கள்  விடுதியை மற்றவர்கள் தொடங்கினால் 15,000 ரூபாய் அரசுமானியம் (Govt., Aid)  அளிக்கும் திட்டத்தையும் கொண்டுவந்தவர் தலைவர் .

கல்வியில் அளப்பரிய பணிகளை செய்ததன் காரணமாகத்தான், முனைவர். அனந்தகிருஷ்ணன், முனவைர். அவ்வைநடராசன், முனைவர். பொன்னவைக்கோ, புலவர். ராமசந்திரன் உள்ளிட்ட பதிமூன்று முன்னாள் துவைவேந்தர்கள் நினைவஞ்சலி மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்கள். தென்னாப்பிரிக்க விடுதலைப் போராளி நெல்சன்மண்டேலாவிற்கு  ஒன்பது துணைவேந்தர்கள் அஞ்சலி செலுத்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால், பதிமூன்று முன்னாள் துணைவேந்தர்கள் ஒன்றுகூடி புகழ்வணக்கம் செலுத்தியதன் மூலம், நெல்சன்மண்டேலாவின் சாதனையையும் முறியடித்திருக்கிறார் தலைவர். கலைஞர் அவர்கள்.

 

அரசு  சேவையில்லங்கள்

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி ,தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் சேவை இல்லத்தை (Service Homes) ஏற்படுத்தினார் கலைஞ்சர். சென்னை, கடலூர், தஞ்சை, திருநெல்வேலி , சேலம் மற்றும் காரைக்குடி ஆகியநகரங்களில் அரசின் சமூகநலத்துறையின் சார்பில் சேவையில்லங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சேவை இல்லங்களின் நோக்கம் என்பது, 8ம்வகுப்பு, 10ம்வகுப்பு, 12ம்வகுப்பு தேர்வுகளுக்கு பெண்களை தயார்செய்வது. கல்வியோடு தையல், தட்டச்சு போன்ற தொழிற்கல்விகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதோடு மட்டுமல்லாமல், மாதம் 120 ரூபாய் உதவித்தொகை, இலவச புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது. 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பெண்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்ச்சிபள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆசிரியர் பியற்ச்சியை முடித்த பெண்கள் ,நேரடியாக ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர்.

மகளிர் மன்றங்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு

கிராமப்புற மக்களின் குறிப்பாக பெண்களுக்கு சமூகம் குறித்தும் ,அரசின் நலத்திட்டங்கள் , சுகாதாரம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர்மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மன்றங்களில் ,குடும்ப நலஆலோசனை, குழந்தைவளர்ப்பு , சிறுசேமிப்பு, விட்டுத்தோட்டம் ஆகியன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமான எண்ணைக்கையில் இருக்கின்றார்கள், நாட்டிலேயே முதலிடம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் முனைவோர்கள் நகரங்களில் இருக்கிறர்கள். தமிழ்நாட்டின் இந்த வெற்றிக்கு காரணம், பெண்களுக்கான  கல்வியும், மகளிர் சுயஉதவிகுழுக்களும். இந்தியாவிலே முதல் முறையாக பெண்களுக்கான மேம்பாட்டு நிறுவனத்தை 1990  (Tamilnadu Women Development Corporation) கலைஞர் ஏற்படுத்தினார்.

இந்த நிறுவனத்தின் கீழ் பெண்களுக்கு தனியாக தொழிற்பயிற்சிப் பள்ளிகள் (Skill Development) ஏற்படுத்தப்பட்டன. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் கிராமப்புற பெண்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ,விவசாயம், தோட்டக்கலை, ஆடு/மாடுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தற்போது, கணினி, கனரகவாகன ஓட்டும்பயிற்சி, கைவினை பொருட்கள் தயாரிப்பு, அலுவலக மேலாண்மை, மின் / மின்னணு பொருட்கள் தயாரிப்பு சமையல்கலை, நரசிங் & மருத்துவமனை மேலாண்மை என்று பல்வேறு தளங்களில் பயிற்சிகள் வழங்குகிறது.

திருமண & மகப்பேறு உதவி திட்டங்கள்

1990களில், பிரசவம் நேரும்போது, மரணிக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) ஒருலட்சம் பேருக்கு 250 பேர் என்கிற அளவில் இருந்தது. 18வயது பூர்த்தியாகும் முன்னர் திருமணம் செய்வது, ஊட்டசத்து குறைபாடு, கர்ப்பகாலத்தில் மருத்துவமனையை கலந்து ஆலோசிக்காமல் இருப்பது ஆகியனவே அதிகமான பெண்களின் இறப்பு விகிததிற்கு முக்கியகாரணங்கள். இந்த மூன்றையும் தடுக்க, பெண்களின் உயிரைக்காக்க செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமணஉதவி திட்டம் மற்றும் முத்துலெட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு உதவிதிட்டம்.

தனது பிறந்தநாள் அன்று, 03/06/1989, பெண்களுக்கான மூவலூர் ராமாமிரதம் அம்மையார் திருமணஉதவித் திட்டத்தை அறிவித்தார் கலைஞர். இந்த திட்டத்தின் முக்கிய நிபந்தனைகள் என்பது, திருமணமாகும் பெண் 8ம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் மற்றும் 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும் என்பதாகும். இதனால், குறைந்த வயதில் திருமணம் செய்வது தடுக்கப்பட்டது.

அடுத்து, கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை  களைய வேண்டும். எப்படி களைவது? தகுந்த நேரத்தில் மருத்துவ ஆலோசனை கிடைத்தால் ஒழிய ,இதை தடுக்கமுடியாது. இப்படி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுக்கவும், அவர்களுக்கு கர்ப்பகாலம், மற்றும் குழந்தை பிறந்தபின்பு கொடுக்க வேண்டிய மருத்துவ ஆலோசனைகளை பெறவும் துவக்கப்பட்டதுதான் டாகடர் .முத்துலெட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு உதவிதிட்டம்.


இந்த திட்டத்தின் படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ ஆலோசனை பெரும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவதை உறுதிசெய்ய, இந்த உதவித்தொகை மூன்றுகட்டங்களாக ,பிரசவத்திற்கு முன் மற்றும் பின் என்று வழங்கப்பட்டது. இதில், இன்னொரு நன்மை என்னவெனில், பிறந்த குழந்தைக்கு தேவையான மருத்துவவசதிகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைத்துவிடும்.

இப்படி பல்வேறு நலதிட்டங்களின் மூலம், தாய்மார்கள்  இறப்புவிகிதத்தை  (MMR) ஒருலட்சம் பேருக்கு 1991ல் 250ல் இருந்து 2018ல் 66 ஆக குறைத்திருக்கிறோம். லெட்சக்கணக்கான தாய்மார்களின் உயிர்கள் கலைஞரின் திட்டத்தால் காப்பற்றப்பட்டு இருக்கினறன.

பெண்ணியவாதி தலைவர் டாக்டர். கலைஞர் 

எப்படி தலைவர் கலைஞரால் இப்படி பார்த்து,பார்த்து பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது என்பதற்கான பதில் ,அவர் அண்ணல் அம்பேதகரின் மாணவர், அண்ணாவின் தம்பி, பெரியாரின் பேரன் என்பதாகும். அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல், பொதுவுடமைதத்துவத்தில் அதிகஈடுபாடு கொண்டவர். தலைவருக்கு இயல்பிலேயே பெண்கள் மீது கரிசனம் கொண்டவர். இதற்கு சான்றாக இரண்டு சம்பவங்களை குறிப்பிடலாம்.

திமுக கழகத்தை சார்ந்த ஒருவர் இறந்துவிட்டார். தலைவர் கலைஞர் அவர்கள் அந்தவீட்டிற்கு சென்றுள்ளார். நிறையகூட்டம். இறந்தவரின் உறவினர்களிடம் உடலை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மதியம் மூன்று மணிக்குமேல் என்று பதில் சொல்லியுள்ளனர். உடனே, கடிந்துகொண்ட தலைவர், ஆண்களாகிய நீங்கள் வெளியேசென்று டீ குடித்து வந்துவிடுகிறீகள், உங்களுக்கு பசி என்பது இருக்காது. ஆனால், உடலின் அருகே இருந்து அழும்பெண்களை பாருங்கள், காலையிலிருந்து அழுது ,அழுது கண்கள் எல்லாம் சோர்ந்துவிட்டது. எனவேமதியம் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் உடலை எடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

2006 தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச கேஸ்அடுப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி தரப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் போது, அதிகாரிகள்அய்யா, நாம் கேஸ்அடுப்பு வழங்குவது பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறோம். இரண்டுவாய் அடுப்பா, அல்லது ஒருவாய் அடுப்பா என்று சொல்லவில்லை. எனவே, செலவை குறைக்க ஒருவாய் அடுப்புள்ள கேஸ் இனைப்பையே கொடுப்போம்என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு பதில் சொன்ன தலைவர்நாம் கேஸ்அடுப்பு கொடுப்பதே, அவர்கள் சீக்கிரம் சமைத்து , அடுப்படியில் இருக்கும் நேரத்தை குறைக்கவேண்டும் என்பதற்குத்தான். இரண்டுவாய் அடுப்பு கொடுத்தால், ஒன்றில் சோறு, இன்னொன்றில் குழம்பு என்று , சமையல் சீக்கிரம் முடிந்துவிடும். மற்ற வேலைகளுக்கு நேரம்கிடைக்கும். எனவே செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்என்று பதில் சொல்லியிருக்கிறார்.

அடுப்படியில் இருக்கும் பெண்களின் கரண்டியை பிடுங்கி, புத்தகத்தை கொடு என்கிறார் அறிவாசான் தந்தை பெரியார். பெண்கள் படிக்க ஆரம்பித்தால் சமூக மறுமலர்ச்சி ஏற்படும் என்பது இதன் பொருள். இப்படி, சமூக மறுமலர்சிக்கும், ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றத்திற்கும், ஏரளமான பெண்கள் மேம்பாட்டு திட்டங்களையும், சமூக நலதிட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்திய மிகப்பெரும் பெண்ணியவாதி தலைவர் டாக்டர். கலைஞர்  அவர்கள்.

 

 

 

 

 

பொதுப் போக்குவரத்து நாயகன் கலைஞர்

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குக் கல்வி எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு பொதுப் போக்குவரத்தும் அவசியமானது என்கிறார்கள் பொருளாதார மற்றும் சமூகவியல் நிபுணர்கள். கல்வியை அனைத்து மக்களுக்கும் பரவலாக்கிய திராவிட இயக்கம், பொதுப் போக்குவரத்தையும் அனைத்து மக்களிடமும்  கொண்டுசேர்த்து  அவர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அண்ணா முதல்வராகிறார்; தலைவர் கலைஞர், பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அவர், முதல்வரான பிறகும் கூட இந்த இரண்டு துறைகளும் தலைவரிடமே இருந்தன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில், 1962ம்ஆண்டு, பொதுப் போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கும்விஷயத்தில் காமராஜர் தலைமையில் அரசு சரியாகச்செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருகிறார் கலைஞர்; அந்ததீர்மானம் வெற்றிபெறவில்லை.

போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், தனியார் பேருந்துகளுக்குச் சொந்தமான வழித்தடத்தின் உரிமம் முடிவுறும்போது, அந்தவழித்தடம் அரசுடைமை ஆகிவிடும் என்பதே அந்தமுடிவு  இந்தமுடிவின்படி,

1.               75 மைல்களுக்கும் அதிகமாக இருக்கும் சாதாரண மற்றும் விரைவு வழித்தடங்கள்;

2.              சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் முடிவுறும் வழித்தடங்கள்;

3.              கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்கள்;

ஆகிய வழித்தடங்கள் தனியார் உரிமம் முடிவுறும்போது அரசுடைமை ஆகும்.

இதற்குப் பிறகு, 1971ம் ஆண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கும் தனியார் பேருந்து நிறுவனங்களை அரசுடைமை ஆக்கும் சட்டத்தையும் (Tamil Nadu Fleet Operating Stage Carriage (Acquisition) Act, 1971) தலைவர் கொண்டு வருகிறார்.

இந்த சட்டத்தின் அடிப்படையில், சதர்ன்ரோடுவேஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை அண்ணாமலை டிரன்ஸ்போர்ட், பொள்ளாச்சி ராமன்&ராமன் பிரைவேட் லிமிடெட், கும்பகோணம் சக்திவிலாஸ், பொறையார் ஆகிய நிறுவனங்களின் பேருந்துகள் மற்றும் வழித்தடம், 1972ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அரசுடைமை ஆக்கப்படுகிறது. சென்னையில் இருக்கும் பேருந்துகளைக் கொண்டு, பல்லவன் போக்குவரத்துக் கழகம்,  1972ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் அன்று அமைக்கப்படுகிறது . இதே போல, சேரன், சோழன் மற்றும் பாண்டிய மன்னர்களின் பெயர்களில் போக்குவரத்துக்குக் கழகங்கள் தொடங்கப்படுகின்றன.

இது தவிர, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அண்ணா போக்குவரத்துக் கழகத்தையும் 1973ம் ஆண்டு தொடங்கப்படுகிறது. போக்குவரத்துக்கழகம், அதன் தொடக்கம் மற்றும் அவற்றின் மாவட்டங்கள் பின்வருமாறு.

1.               சோழன் போக்குவரத்துக் கழகம்–01/03/1972- தஞ்சாவூர் மற்றும் திருச்சி

2.              சேரன் போக்குவரத்துக் கழகம்–01/03/1972-கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி

3.              பாண்டியன் போக்குவரத்துக் கழகம் -17/01/1972- மதுரை மற்றும் காமராஜர்

4.              பல்லவன் போக்குவரத்துக் கழகம்–01/01/1972-சென்னை, செங்கல்பட்டு, மற்றும்  திருவண்ணாமலை

5.              அண்ணா போக்குவரத்துக் கழகம்–15/02/1973-சேலம் மற்றும் தர்மபுரி

6.              கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் -01/01/1974- திருநெல்வேலி

7.              தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் -16/01/1975- தென்னாற்காடு

அரசுடைமை ஆக்கப்பட்ட சிலவழித்தடங்கள்

·      கிருஷ்ணகிரி - வேலூர்

·      பாபநாசம் - கன்னியாகுமரி

·      கோபிசெட்டிபாளையம் - பழனி

·      குந்துக்கோட்டை - தருமபுரி

·      கடலூர் - சேலம்

·      சென்னை - திருவண்ணாமலை

·      காஞ்சிபுரம் - விழுப்புரம்

·      வேலூர் - ஆத்தூர்

·      கோயம்புத்தூர் - பவானி

·      திருச்செந்தூர் - செங்கோட்டை

·      சேதுநாராயணபுரம் - சேவல்பட்டி

·      காரைக்குடி - திருச்சி

·      சேலம் - அதிரப்பள்ளி

இப்படி, பொதுப் போக்குவரத்தை முக்கிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் விரிவு படுத்தினார் தலைவர்  தனியாருக்கும், அரசுப் பேருந்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம், ஒரு பயணத்திற்கு பத்து முதல் இருபது பேர் அமர்ந்தால் கூட அரசுப் பேருந்து பயணிக்கும்; தனியாரால் இது முடியாது.

1976ம் ஆண்டு திரு. சி.ஆர்.பட்டாபி தலைமையில், ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றை, போக்குவரத்துத் துறையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆராய ஏற்படுத்துகிறார் கலைஞர்.

 

சிற்றுந்துதிட்டம்

விடுபட்ட நகரங்களையும், குக்கிராமங்களையும் இணைக்கச் சிற்றுந்து திட்டத்தை, 1997ம் ஆண்டு கொண்டுவந்தார் கலைஞர். இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இணைக்கப்பட்டது.

நிறையப் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், பொருளாதார நிபுணர் திரு. ஜெயரஞ்சன் அவர்கள் சொன்னதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தப் போக்குவரத்து இணைப்பின் காரணமாக, ஒடுக்கப்பட்ட / விளிம்பு நிலைமக்கள், கிராமத்தில்பண்ணையாரை / நில உடைமையாளரைச் சார்ந்து வாழும் வாழ்க்கையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குப் பிடித்தவேலையைப் பக்கத்து நகரங்களுக்கோ அல்லது ஊர்களுக்கோ சென்று செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பண்ணையாரைச் சார்ந்து இருக்கும் நிலை கணிசமாக மாறியிருக்கிறது என்கிறார்.

இதைவிடப் பெரிய சாதனை என்ன செய்ய வேண்டும்?

 

- Vetri Selvan, B.E,PMP