Tuesday 29 December 2020

1967 - அறிஞர் அண்ணா சிறப்புச் சொற்பொழிவு

 1967 - அறிஞர் அண்ணா சிறப்புச் சொற்பொழிவு

 

(1957 இல் அண்ணாதி.மு.க. 1967ல் ஆட்சியைக் கைப்பற்றும்என்று தெரிவித்துள்ளார்பத்தாண்டுகள் திட்டமிட்டுப்பணியாற்றியே ஆட்சிக்கு வந்தது தி.மு.க.)

 

11-08-1957-ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு அறிஞர்அண்ணா அவர்கள் மதுரையில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு: -

 

நான் இங்கே பேசவேண்டும் என்று நம்முடைய நண்பர்களாகக்கொடுத்திருக்கிற தலைப்பு 1967' என்பதுநானாகத்தேர்ந்தெடுத்துக் கொண்ட தலைப்பு அல்லநம்முடையநண்பர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதுஅவர்களாகத்தேர்ந்தெடுத்தது என்றுகூட நான் கருதவில்லைநம்முடையமாநில நிதியமைச்சர் அவர்கள் ஒரு பத்து ஆண்டுக்கு நீங்கள்எல்லாம் 'சும்மாஇருங்கள் என்று சட்டசபையிலே சொன்னதைமனதிலே வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்தார்கள் என்றுகருதுகின்றேன்.

 

நாட்டுப் பிரிவினையில் இந்தப் பத்து ஆண்டு 1957-லிருந்து கூட்டினால் 1967 ஆகின்றதுஇந்தப் பத்தாண்டில் என்னநடைபெறக்கூடும் என்பதைக் கேட்கத்தான் இந்தத்தலைப்பைக் கொடுத்திருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

 

நம்முடைய தலைவர் அவர்கள் செவியில் 1957 – 1967 என்றசொற்கள் விழுந்தவுடன் 1917-க்கு அவருடைய சிந்தனைசிறகடித்துப் பறந்ததை இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

 

உண்மையிலேயே தமிழகத்தில் 1917-ல் ஒரு பெரிய புரட்சிக்குமுதல் கட்டம் நடத்தப்பட்டதுஅது ஒரு பெரிய புரட்சி என்பதுநமக்கெல்லாம் தெரியாமல் போனதற்குக் காரணம் நம்மிலேபலபேர் 1917-ல் அரசியல் அலுவல்களைக் கவனிக்கக்கூடியபருவத்திலே இருந்தவர்கள் அல்லஅதிலும் குறிப்பாகத் திமுகழகத்திலே இன்றைய தினம் ஈடுபாடு கொண்டவர்களிலே பலபேர் அந்த நாட்களிலே தொட்டிலிலே படுத்துத்தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளாக இருந்திருப்பார்கள்

 

ஆனால் இன்றையதினம் நம்மிடையே என்னென்ன மாதிரியானஎழுச்சிகள் காணப்படுகின்றனவோஇன்றைய தினம் எங்கெங்குவாலிபத் தோழர்கள் உற்சாகமாக ஒரு கொள்கைக்காகத்தங்களைத் தாங்களே ஒப்படைத்திருக்கிறார்களோஅதைப்போல் அப்பொழுது 1917-ல் ஒரு மாபெரிய மன எழுச்சிநம்முடைய தமிழகத்திலே ஏற்பட்டது.

 

அது தொடர்ந்து நடைபெறாமல் போனதற்குக் காரணங்கள் பலஇருக்கின்றனஅந்தப் புரட்சி பிற்காலத்திலேஒடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் நம்மாலே சரியானமுறையிலே இன்னும்

கணிக்கப்படவில்லை.

 

1917-ல் தான் நம்முடைய தலைவர் அவர்கள் எடுத்துச்சொன்னபடி தமிழ் நாடு உண்மையிலேயே தன்னை உணரத்தலைப்பட்டதுதான் ஒரு தனி இனம் என்பதையும் தன்னுடையஇனம் தாழ்த்தப்பட்டிருக்கிறது என்பதனையும்அந்த இனம்தாழ்த்தப்பட்டிருந்தாலும்அது மறுபடியும் தளைகளைஉடைத்துக்கொண்டு முன்னேற முடியும் என்றதன்னம்பிக்கையையும்

 

1917-லே பெற்றதுநாம் எல்லாம் எப்படி திராவிட இயக்கத்திலேஈடுபாடு கொண்டிருக்கிற நேரத்தில் கல்லூரிகளிலே படிக்கிறமாணவர் களாகவும்உயர்நிலைப்பள்ளிகளிலேபடிக்கிறவர்களாகவும் இருந்து இதிலே ஈடுபாடு கொண்டோமோஅதைப்போல இந்த 1917-லே இன்றையதினம் தலைமைவகித்திருக்கின்ற நம்முடைய நண்பர் சென்னையிலே சட்டக்கல்லூரியிலே படித்துக் கொண்டிருக்கிற மாணவராக இருந்துஅதிலே ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

 

இதைப்போல எண்ணற்றவர்கள் தமிழ்நாட்டிலேபார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு உறுதுணையாகஇருந்தார்கள்அப்படித் தோற்றுவிக்கப்பட்ட அந்த இயக்கம்பார்ப்பனரல்லாதார் இயக்கம்என்று பொதுப்படையாகஆரம்பிக்கப்பட்டாலும் அதனுடைய அடிப்படையிலே மூன்றுகருத்துக்கள் அப்பொழுதே கருவுருவில் இருந்தனபார்ப்பனரல்லாதார் முன்னேறவேண்டும் என்பதை அவர்கள்வெளிப்படையாகவும் மிகைப்படுத்தியும்பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்பட்டாலும்பார்ப்பனரல்லாதார் எந்தெந்தத் துறையிலே முன்னேறவேண்டும்என்பதையும்அவர்கள் அந்தந்தத் துறைகளிலே முன்னேறாமல்போனதற்குக் காரணங்கள் என்ன என்பதனையும்அந்தக்காரணங்களைக் கண்டுபிடித்தான பிறகு அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்கி நிறைப்படுத்திமறுபடியும் பார்ப்பனரல்லாதார்சமுதாயம் எப்படி முன்னேற முடியும் என்பதற்கானவழிவகைகளையும் அன்றையத்தினமேஆய்ந்தறிந்திருக்கிறார்கள்அந்த நேரத்தில் அவர்கள் அரசியல்துறையை மறந்துவிடவில்லை - பொருளாதாரத்துறையையும்இழந்துவிடவில்லை சமுதாயத் துறையைப்பற்றியும் அக்கறைகாட்டாமலில்லைடாக்டர் நாயர் ' அவர்கள் இத்தனைகருத்துக்களையும் ருருவாகத் திரட்டி எடுத்த ஒரு மாபெரும்புரட்சித் தந்தையாக அன்றையதினம் விளங்கினார்கள்ஆனால்தமிழ் நாட்டில் எப்படி நாம் நம்முடைய மன்னர்களைமறந்துவிட்டிருக்கின்றோமோஎப்படி ஒரு மன்னனுடைய மகன்யாரென்று சரித்திர புத்தகங்களைப் புரட்டினால் வரகுணபாண்டியன் மகன் இரண்டாவது வரகுண பாண்டியன் என்றுபோட்டுஇது இல்லையென்பாரும் உண்டு என்று அடியிலேகுறிப்புத் தரும்வகையில் குழப்பமான வரலாற்றைவைத்திருக்கிறோமோஅதே முறையிலேதான் டாக்டர்நாயரைக்கூட இன்றையதினம் நாம் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை.

 

அதற்குக் காரணங்கள் இரண்டுஎன நான் நினைக்கின்றேன். 1917-ல் ஏற்பட்ட பரபரப்பான அரசியல் நிகழ்ச்சிகளைவிடமிகப்பரபரப்பான அரசியல் நிகழ்ச்சிகள் இடைக்காலத்தில் ஏற்பட்டனமற்றும் ஒன்று நம்முடைய தமிழ்ப்பண்புக்கு ஏற்றபடி நம்முடையஅருமை பெருமைகளை நாம் குறித்து வைத்திருக்கின்றபழக்கத்தை நெடுங்காலமாக இழந்துவிட்டோம்இன்றைய தினம்ரோம் நாட்டு வரலாற்றை நீங்கள் துருவிப் பார்க்கவேண்டுமென்றால் ஜூலியஸ் சீசர் அணிந்து கொண்டிருந்த கால்செருப்பின் அளவிலேயிருந்து,

 

கிளியோபாட்ரா அணிந்திருந்த காதணி வரை வரலாற்றுக் குறிப்புஉண்டுஆனால் தமிழகத்தின் வரலாற்றை நீங்கள் பார்க்கவேண்டுமென்றால்இந்த மண்டலத்திலே ஆண்டுகொண்டிருந்தமன்னன் இன்னாருடைய மகன் என்று கூறுவதற்குஇரண்டுமூன்று வரலாற்று ஆசிரியர்களும்நான்கைந்து தமிழ்ப்புலவர்களும்பத்துப் பதினைந்து திங்கள் சேர்ந்துஉட்கார்ந்தாலும்ஆளுக்கொரு செய்தியைத்தான் தரமுடியுமேதவிரஅத்தனைபேரும் ஒத்த கருத்தைத் தரமுடியாத ஒரு நிலைஇருக்கிறதுஅதற்குக் காரணம் புலவர்களிடையே புலமைக்குறைவு என்று அர்த்தமல்லநம்முடைய முன்னோர்கள்,மனிதர்களுடைய செயல்களைக் குறித்துவைப்பது இழுக்கு என்றஒரு தவறான கருத்திலே குறித்து வைக்காமல் போய்விட்டார்கள்.

 

1917-லே துவக்கப்பட்டுத் தென்னகம் முழுவதிலும் பெரும்காட்டுத்தீ என்று எதிரிகள் சொன்னதைப் போலப் பரவி’, இங்கிலாந்திலே சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்தஅரசியல் தத்துவ ஆசிரியர்களைக்கூடகண்களை அகலத்திறக்கச் செய்த டாக்டர் நாயருடைய வரலாறு நமக்குக்கிடைக்காமலிருப்பதிலே ஆச்சரியமில்லை.

 

டாக்டர் நாயர் குறித்து இன்றைய தினம்புதிதாகத் திராவிடஇயக்கத்திலே ஈடுபாடு கொண்டிருப்பவர்களுக்குஏதோ நான்சொல்லுகிறேன் என்பதற்காக உபசாரத்திற்குக்கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிரடாக்டர் நாயரைப் பற்றிஎண்ணுகின்ற நேரத்தில் என்னுடைய மனதிலே ஏற்படுகின்ற மனஎழுச்சிஎன்னுடைய மனதிலே ஏற்படுவதைவிட நம்முடையதலைவர் மனதிலே ஏற்படுகின்ற மன எழுச்சிஉங்களில்பலருக்கு ஏற்படாதுஏற்படாதது உங்களுடைய குறையல்ல நாம்நம்முடைய வரலாற்றைத் தொகுத்து வைக்காததால் ஏற்பட்டகுறைதான்டாக்டர் நாயர் அவர்கள் அரசியல் துறையிலேயும்பொருளாதாரத் துறையிலேயும்சமுதாயத் துறையிலேயும்சேர்ந்து பணியாற்றிய ஒரு பெரும் தலைவர் ஆவார்கள்.

 

பிற்காலத்திலே வந்த ஜஸ்டிஸ் இயக்கம் இந்த மூன்றையும்ஒன்றாக அழைத்துச் செல்லத் தவறியதனால்தான் நாட்டுமக்களாலே ஓரளவுக்குப் புறக்கணிக்கப்பட்டதுடாக்டர் நாயர்இந்த மூன்றையும் சம எடையில்ஒருசேர இழுத்துச் சென்றும்மூன்று துறைகளிலேயும் புரட்சி மனப்பான்மை ஊட்டியகாரணத்தாலேதான்அந்த நாட்களிலே கல்லூரிகளிலேபடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் டாக்டர் நாயர் பேசுகிறார்என்றால்திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் திராவிடர்இயக்கக் கூட்டங்கள் நடைபெற்றால் எவ்வளவு ஆர்வத்தோடுவருகிறார்களோ அத்தனை ஆர்வத்தோடு வந்தார்கள்.

 

இன்றைய தினம் திராவிடர் இயக்கத்தை எப்படி காங்கிரஸ்தலைவர்கள் கருவறுத்துவிட வேண்டும் என்று கூசாதுஅஞ்சாதுபல பழிகளைச் சுமத்துகிறார்களோஅப்படிப்பட்ட பலபழிச்சொற்களை யெல்லாம் டாக்டர் நாயர் பேரிலும் சுமத்திஇருக்கின்றார்கள்எப்படி இத்தனை பழிச் சொற்களைத் தாண்டிதிராவிடர் இயக்கம் இன்றைய தினம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறதோஉயிர் வாழ்வது மட்டுமல்லபுதுவலிவினைப்பெற்றுக்கொண்டு வளர்ந்து வருகின்றதோஅதைப்போலவே டாக்டர் நாயர் அவர்களும் அந்தப் பழிச்சொற்களை யெல்லாம்தாண்டிஅவர் வாழ்ந்திருந்த காலம்வரையில் - அவர் தமிழ் நாட்டினுடைய துர்ப்பாக்கிய வசத்தால்அதிக காலம் வாழ்ந்திருக்கவில்லை வாழ்ந்திருந்த காலம்வரையிலே மாற்றார்கள் வீசியெறிந்த கணைகளைத்தாங்கக்கூடிய நெஞ்சுரத்தைப் பெற்றிருந்தார் ஒரு தடவைடாக்டர் நாயர் அவர்களைக் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தபெரும் தலைவர்கள் - மைலாப்பூரையும்திருவல்லிக்கேணியையும் சேர்ந்தவர்கள் கேலியாகச்சொன்னார்கள் - டாக்டர் நாயரைப் போன்றவர் களெல்லாம்வெள்ளைக்காரனுக்குத் துதி பாடிக் கொண்டிருக் கிறார்கள்வெள்ளைக்காரனுக்குத் தாசனாக இருக்கின்றார்கள்வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தைத் தாங்குகின்றார்கள் என்றுடாக்டர் நாயர் சொன்ன வாசகத்தை நான் அவர்களுடையவரலாற்றுக் குறிப்புகளிலேயிருந்து படித்துப் பார்த்திருக்கிறேன்அவர் சொல்லியிருக்கின்றார் “தேசியம் பேசுகின்ற என்னுடையகாங்கிரஸ் நண்பர்கள் இந்தியாவிலே சம்பாதிக்கின்ற பணத்தைஇங்கிலாந்திலே கொண்டுபோய்ச் செலவழிக்கிறார்கள்” - நான்இங்கிலாந்திலே வைத்தியசாலை நடத்திஇங்கிலீஷ்காரன்பணத்தைச் சம்பாதித்துக்கொண்டுவந்து இந்தியாவிலேசெலவழிக்கிறேன்நான் உண்மை தேசீயவாதியாஇவர்கள்உண்மையான தேசீய வாதிகளா” என்று கேட்டார்ஏனென்றால்டாக்டர் நாயர் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பிரபலமானமருத்துவர்கள் குடியிருக்கின்ற வீதியில் ஒரு மருத்துவமனைஇருந்ததுஅவர் அறுவை மருத்துவத்திலே சிறந்த நிபுணர்ஆகையினாலே அவருடைய வருகைக்காக ஆங்கிலேயர்கள் கூடஅங்கே காத்துக்கொண்டிருப்பார்கள் - ஆண்டிலே மூன்று நான்குதிங்கள் அவர் இங்கிலாந்திற்குச் சென்று நோயாளிகளைக் கண்டுமருத்துவம் செய்து அரசியல் நிலைமைகளையும்அறிந்துகொண்டு பணத்தைச் சம்பாதித்துக் கொண்டுவந்துஇங்கே செலவழித்தார்கள்.

 

இதனை அவர் எடுத்துச் சொன்னார் என்று நான்படித்துப்பார்க்கின்ற நேரத்தில்எவ்வளவு பெரிய நெஞ்சுரம்படைத்தவர் 1917-ல் தமிழர்களுக்குக் கிடைத்திருந்தார்கள்என்பதை எண்ணி எண்ணி மனம் பூரிப்பாலே மகிழ்ந்தேன்மகிழவேண்டியிருக்கிறது.

 

மற்றொரு தடவை - டாக்டர் நாயர் அவர்கள் இந்தநாட்டுத்தேசியவாதிகளாலே கண்டிக்கப்பட்ட நேரத்தில்அவர்வெளிப்படையாகச் சொன்னது அந்தக் காலத்து ஆங்கிலப்பத்திரிகையிலே வெளிவந்ததுதிராவிட நாட்டினுடையகருத்துக் கருவூலம் அதிலே இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

 

அவர் எழுதியிருக்கிறார், “எந்த நேரத்திலானாலும் சரி, At any time Tamilians will prefer London to Delhi, என்று தெளிவாகஎழுதியிருக்கின்றார்நீ லண்டனிலே அடிமைப்பட்டிருக்கிறாயாடெல்லிக்கு அடிமைப்பட்டிருக்கிறாயாஎன்று கேட்டால்தென்னிந்தியர்களாகிய நாங்கள் வேண்டுமானால் லண்டனுக்குஅடிமைப்பட்டிருந்து விடுதலை பெறுவோமே தவிரடெல்லிக்குஅடிமைப்பட்டிருக்க மாட்டோம் என்று டாக்டர் நாயர் அவர்கள்அன்றைய தினமே எழுதி வைத்திருக்கிறார்கள்.

 

டாக்டர் நாயர் அவர்கள்தான் திராவிட இன உணர்ச்சிதமிழகத்திலே பரவுவதற்கு வித்தூன்றினார்அவர் பிறந்ததுகேரளம்அவர் வாழ்ந்தது தமிழகம்அவர் உழைத்தது தமிழருக்குடாக்டர் நாயரைத் தமிழகத்திலே அறிந்திருப்பதைப்போல்கேரள நாட்டிலேகூட அதிகம் அறிந்திருக்கமாட்டார்கள்.

 

ஏனென்றால்அவர் வாலிபப் பருவம் அடைந்ததும் கேரளநாட்டை விட்டுத் தமிழகத்திலேயே குடியேறினவர்அந்தநாட்களிலே நம்முடைய நீதிக் கட்சித் தலைவர்கள் மலையாளநாட்டைச் சேர்ந்த டாக்டர் நாயரும்ஆந்திர நாட்டைச் சேர்ந்தபெருந் தலைவர்களும்தமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்களும்கன்னட நாட்டைச் சேர்ந்தவர்களும் அப்போது ஒரிசாவும்நம்மோடு ஒன்றாக இணைந்திருந்த காரணத்தால் - ஒரிய நாட்டுத்தலைவர்களும் இத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்துபணியாற்றினர்அவர்கள் இயக்கத்துக்கு இட்ட பெயரே South Indian Liberal Fedaration தென்னிந்திய விடுதலைச் சங்கம் (நலஉரிமைச் சங்கம்என்பதுதான்தென்னிந்தியா என்பதைத்தான்வலியுறுத்தினார்கள்ஆனால் பிற்காலத்தில் நீதிக்கட்சிவிரிவடைவதாகக் கருதிக்கொண்டு தென்னிந்தியா என்பதைஅவர்கள் இன்னமும் விரிவுபடுத்திப் பம்பாய்க்குச் சென்று ஒருமாநாட்டையும்கோலாப்பூருக்குச் சென்று ஒரு கிளையையும்கல்கத்தாவில் ஒரு கிளையையும் வைத்துத் தென்னிந்திய என்கிறசிறப்பைத் தாங்களாகவே இழந்தார்கள்அதனாலேதான்நீதிக்கட்சி பிற்காலத்திலே கெட்ட நிலைமை அடைய நேரிட்டதேதவிர அதற்கு வித்து ஊன்றியவர் நல்ல வித்து தான்ஊன்றியிருக்கிறார்நல்ல கருத்துக்களைத்தான் தந்திருக்கிறார்என்பதை இன்றைய தினம் நம்முடைய தலைவர் அவர்கள்எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்த நேரத்தில் நான்எண்ணிப்பார்த்தேன்.

 

நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள் காங்கிரஸ் தலைவர்கள்திராவிட இயக்கத்தவரையும் அதிலும் குறிப்பாக என்னையும்தூற்றுவதற்காகக் கிளம்புகின்ற நேரத்தில்அவர்கள்சொல்லுகின்ற ஒரே ஒரு குற்றச்சாட்டுஅந்த அண்ணாத்துரையைநாங்கள் அறியமாட்டோமா - இவன் நீதிக்கட்சிக்காரன்  என்றுசொல்லியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.

 

அவர்கள் சொன்ன அத்தனை நேரத்திலேயும்தெளிவாகதிட்டமாகச் சொல்லியிருக்கின்றேன்நான் நீதிக் கட்சியிலேஈடுபாடு கொண்டிருந்தவன் என்று எடுத்துச்சொல்லிக்கொள்வதிலே வெட்கப்படவுமில்லைவேதனையடையவுமில்லை என்று.

 

நான் தமிழகத்து மேடைகளிலே பலதடவைசொல்லியிருக்கிறேன்அதுமட்டுமல்ல நீதிக்கட்சி இயக்கம்எந்தக் கட்டத்தை அடைய வேண்டுமோ அந்தக் கட்டத்தைஅடைவதற்கு என்னாலான பணியை நான் செய்திருக்கின்றேன்என்பது என்னுடைய உள்ளத்திற்கும் தெரியும்தமிழ் நாட்டுஅரசியல் நிலைமைகளை ஆராய்ந்தவர்களுக்கும் தெரியும்.

 

ஆகையினாலே திமுகழகம் நீதிக் கட்சியினுடைய வழிவழிவந்தது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால் அதைக் குறித்துநான் வருத்தப்படுவதுமில்லை - வெட்கமடைவதுமில்லை.

 

ஏனென்றால் நீதிக்கட்சி இயக்கம் என்பது பிற்காலத்தில் அதுபட்டம் பதவிகளைத் தேடுகின்றவர்களும் சட்டத்தினுடையதுணையைத் தேடுகின்றவர்களும் சட்டசபையிலே இடம்பெற்றால்மட்டும் போதுமென்ற எண்ணம் கொண்டவர்களும்மட்டும் கொண்டதாகிவிட்டதுஒரு காலத்தில் - துவக்கப்பட்டகாலத்திலே - பாமர மக்களை ஈடேற்றுவதற்காகவும்பார்ப்பனர்அல்லாத சமுதாயத்தைக் கடைத்தேற்றுவதற்காகவும் பார்ப்பனர்அல்லாத சமுதாயம் பொருளாதாரத் துறையிலேயும் அரசியல்துறையிலேயும் விடுதலை யடைந்து முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகவும் துவக்கப்பட்ட ஒரு இயக்கமே தவிரவெறும் பட்டத்திற்காக மட்டும் துவக்கப்பட்ட இயக்கமல்ல.

 

ஆகையினாலே அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களென்று ஒத்துக்கொள்வதிலே எந்தவகையிலும்யாருக்கும் இழுக்கு இல்லைஅந்த இயக்கம் பிற்காலத்தில்யானைகூட சேற்றிலேஅழுந்திவிட்டால் ஒரு கால் சேற்றில் இறங்கிவிட்டால்அதைமூன்று காலாலே தூக்க ஆரம்பித்தால்அந்த மூன்று கால்களும்சேற்றிலே அழுந்தி யானை வெளியிலே வராமல் இருப்பதைப்போல் - ஜஸ்டிஸ் கட்சி பிற்காலத்தில் மக்கள் இயக்கத்திலேஇருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டியிருந்ததுஅதற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த தத்துவங்களைகருத்துக்களைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாட்டிலே அந்த நாட்களில் கல்வியறிவுபரவவில்லை.

 

எனக்கே நன்றாக நினைவிலே இருக்கின்றதுகடப்பையில்நடைபெற்ற ஒரு மாநாட்டில் - நான் அப்போது தமிழ் நாட்டில் மிகஅதிகமாகப்பேசப்பட்டு வந்த திலகர் சுயராஜ்ய நிதி மோசடிவழக்கைப்பற்றி ஒருமணிநேரம் பேசினேன் - ஆங்கிலத்தில்;அப்போது எனக்குப் பக்கத்திலேஜஸ்டிஸ் கட்சியிலே அப்போதுதலைவராக இருந்த பொப்பிலி அரசரும் வேறு பல ஜஸ்டிஸ்கட்சித் தலைவர்களும் வீற்றுக் கொண்டிருந்தார்கள்ஜஸ்டிஸ்கட்சியினுடைய பிரமுகர் ஒருவர் பக்கத்திலே அமர்ந்திருந்தார்.

 

ஒருமணி நேரம் நான் - திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெயராலேஒரு கோடி ரூபாயை வசூலித்து அந்த ரூபாயிலே பெருத்தமோசடிகள் ஏற்பட்டதையும்அந்த மோசடிகளை விளக்கிமராட்டிய நாட்டிலே இருந்து வெளியிடப்பட்ட “மராட்டா” என்றபத்திரிகையில் தொடர்ச்சியாகத் தலையங்கம்எழுதப்பட்டதையும்எடுத்துச் சொன்னேன்சொல்லிவிட்டுமாநாடு பிற்பகலுக்குக் கலைந்து சாப்பாட்டுக்குப் போகிறநேரத்தில்ஜஸ்டிஸ் கட்சியினுடைய பிரமுகர் என்னுடையதோளிலே கைபோட்டுக்கொண்டு சொன்னார்

 

அண்ணாதுரைநீ நன்றாகத்தான் பேசுகிறாய்ஆனால் எதற்காகஇவ்வளவு பெரிய அண்டப் புளுகு சொன்னாய்?” என்று என்னைக்கேட்டார்நான் அப்படியே அதிர்ச்சி அடைந்துபோய் “ஐயா நான்என்ன பேசினேன் - நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்” என்றேன். “என்ன ஒரு கோடி ரூபாயை காங்கிரஸ்காரர்கள் வசூலித்தார்கள்அதை ஏப்பம் விட்டுவிட்டார்கள் என்று சொன்னாயேஇப்படிச்சொல்லலாமாஎப்பொழுது அவர்கள் வசூலித்தார்கள்எங்கேஏப்பம் விட்டார்கள்?” என்று கேட்டார்நான் சொன்னேன் “ஐயாநம்முடைய ஜஸ்டிஸ் பத்திரிகையிலே T. A. V. நாதன் அவர்கள்அருமையாக ஒரு ஆறு தலையங்கம் எழுதியிருக்கிறாரேபடிக்கவில்லையா?” என்றேன். “நான் ஜஸ்டிஸ் பத்திரிகைபடிக்கிற வழக்கமில்லை” என்றார்அப்படிப்பட்ட தலைவர்கள்வந்த பிறகுதான் ஜஸ்டிஸ் கட்சி கீழே விழுந்ததே தவிரவேறில்லை.

 

ஜஸ்டிஸ் கட்சியை அப்படிப்பட்ட தலைவர்கள்கரத்திலேயிருந்துவிடுவிக்க வேண்டுமென்றுதான் சேலத்திலேநான் முயற்சி செய்தேன் - ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையைஅழிக்க வேண்டுமென்றல்ல.

 

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமநீதி காணும் நோக்குடன்துவக்கப்பட்டதே தவிர அது பார்ப்பனர்களை தனிப்பட்டமுறையிலே வெறுத்ததில்லைஎன்பேரிலும் இப்போது பழிசொல்லுகிறார்களல்லவா அண்ணாதுரை இப்போது ஆறுமாதகாலமாக திடீரென்று பார்ப்பனர்களுக்கு வேண்டியவனாகிவிட்டான் என்றுநான் வேண்டியவனாக இருக்கிறேனோஇல்லையோ அது வேறு விவகாரம்ஆனால் உண்மையிலேயேபார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையிலே வெறுக்கவேண்டியஅவசியமில்லை என்றும் பார்ப்பனர்களுக்கு என்று இருக்கின்றஉரிய பங்கைத் தந்துபார்ப்பனரல்லாதாருக்கு என்றுஇருக்கின்ற உரிய பங்கு பார்ப்பனரல்லாதாருக்குக்கிடைக்கவேண்டும் என்ற நீதியைஅடிப்படையாகக்கொண்டதால்தான் ஜஸ்டிஸ் கட்சிக்குநீதிக்கட்சி என்றே தமிழிலே பெயரிடப்பட்டது

 

ஜஸ்டிஸ் கட்சியினுடைய அமைச்சரவை அமைக்கப்பட்டநேரத்தில் சேதுரத்தினம் ஐயரென்ற ஒரு பார்ப்பனரும் மந்திரியாகஇருந்தார்அதை உங்களுக்கு நான் கவனப்படுத்துகிறேன்இப்படித் துவக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி எதைச் செய்யத்தவறிவிட்டது என்றால் பார்ப்பனரல்லாதாரைபடித்துபட்டம்பெற்று உத்தியோகத்துக்குப் போகின்ற பார்ப்பனரல்லாதார்மட்டும்தான் இருக்கிறார்கள் என்று தப்பாகக் கணக்கிட்டதுபார்ப்பனரல்லாத சமுதாயத்தில் B. A. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் - M. A. படித்துவிட்டு மேல் உத்தியோகத்துக்குப்போகவேண்டியவன்தாசில்தாராக இருந்து கலெக்டர்உத்தியோகத்துக்கு “புரமோஷன்” கிடைக்க வேண்டியவன்இப்படிப்பட்ட சிலர்தான் பார்ப்பனரல்லாத சமுதாயத்திலேஇருக்கிறார்கள் என்று கணக்குப் போட்டார்களே தவிரகைவண்டி இழுக்கின்ற கந்தன்கடைவைத்துப் பிழைக்கின்றவரதன்வயலிலே வேலை செய்கின்றவன்ஒரு வேலையும்கிடைக்காதவன்உச்சிப் பொழுதுவரையிலும் பாடுபட்டாலும் ஒருகவளம் சோற்றுக்கு வழியில்லாமல் மிராசுதாரரிடத்திலேஅடிபடுபவன்கங்காணியினுடைய சவுக்கடியைத் தாங்குபவன்இங்கே பிழைப்பதற்கு வழியில்லாமல் சிலோனுக்குக் கூலியாகஓடுபவன்இப்படிப்பட்ட பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள்ஏழைகள் இருப்பதை அவர்கள் காண மறுத்தார்கள்.

 

காண மறுத்ததற்குக் காரணம் இரண்டு இருக்கலாமென்றுநானாக நினைக்கிறேன்ஒன்றுநம்முடைய ஆட்சி ஏற்பட்டால்அவர்களை ஈடேற்றிவிடலாம் என்று கருதியிருக்கக்கூடும்.

 

மற்றொன்றுஅவர்களைப் பற்றிய பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டால் இந்தப் பிரச்சினை கெட்டுவிடும் என்று அவர்கள்எண்ணியிருக்கலாம்ஆனால் நான் காஞ்சீபுரத்திலே கருடசேர்வை விழா நடக்கிறபோது பார்த்திருக்கிறேன்பார்ப்பனர்கள்அங்கே தாங்கமுடியாத ஒரு பெரிய குடையை அந்த வாகனத்தின்பக்கத்திலே வைத்துக்கொண்டு பிடித்துக்கொண்டிருப்பார்கள்வாகனமோ பளுவானதுஅதைத் தூக்குகின்றவர்களோஆடியசைந்து தூக்கிக்கொண்டு போவார்கள்இலட்சக்கணக்கான மக்கள் எதிரிலே நின்றுகொண்டிருப்பார்கள்எள் விழ இடமில்லை என்பார்களேபழமொழி, அதைப்போலிருக்கும்.

 

அந்தக் குடை கொஞ்சம் காற்றிலே ஆடினால் கீழேகவிழவேண்டும்அந்த நேரத்தில் பார்ப்பனர்களை நான்உற்றுப்பார்த்திருக்கிறேன்அதிலும் வெற்றிலைப் பாக்குபோடுகின்ற பழக்கமுள்ள பார்ப்பனர்குடையே விழாமல்வெற்றிலை பாக்குப் போட்டதை நான் பார்த்திருக்கிறேன்ரொம்ப லாவகமாகப் போடுவார்இரண்டு விரலாலே மட்டும்வெற்றிலையை எடுப்பார் மற்றொரு விரலாலே சுண்ணாம்பைத்தடவுவார் - இப்படியே தடவிக்கொண்டிருப்பார்அதே நேரத்திலேவழியிலே தெரிந்த பக்தர்கள் - கொஞ்சம் பசையுள்ள பக்தர்கள்பார்த்தால் அவர்களுக்கும் புன்னகையை பரிசாக அளிப்பார்வரதராஜப்

பெருமாளுடைய மகரக் கண்டிகையையும் பார்த்துக்கொள்வார்.

 

அதே நேரத்திலே புகையிலைக் காம்பு எங்கே இருக்கிறதுஎன்பதையும் தேடிக்கொள்வார்.

ஜஸ்டிஸ் கட்சி அந்த வித்தையைச் செய்யத் தவறிவிட்டதுஅந்தக் கட்சிபடித்த பார்ப்பனரல்லாதாரை மட்டும் பார்த்தது.

 

நான் சொன்ன உதாரணத்தின்படிஅதே நேரத்தில் ஏழைபார்ப்பனரல்லாதாரையும்இல்லாத கொடுமையினாலேவாட்டப்படுகின்ற பார்ப்பனரல்லாதாரையும் பார்ப்பதற்குத்

தவறிவிட்டது.

 

அதனாலேதான்இனி அவர்களிடத்திலே அது இருந்தால்ஜஸ்டிஸ் இயக்கம் பாமர மக்கள் இயக்கம் ஆகாது என்று சொல்லிஅரண்மனையிலே பிறந்த குழந்தையானாலும் எப்படிசித்தார்த்தர் அரண்மனையிலே பிறந்தாலும் அவர் புத்தமார்க்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால் அரசமரத்தடிக்குவந்தாரோ அதைப்போல அரண்மனையிலே இருந்த ஜஸ்டிஸ்கட்சிவெட்ட வெளிக்கு ஆலமரத்தடிக்குவந்தால்தான் அதுமக்களுக்குப் பயன்படும் என்று கருதி சேலத்திலே நடைபெற்றமாநாட்டில்அரண்மனையிலே இருந்த ஜஸ்டிஸ் கட்சியைபெரியார் ராமசாமி மிகப்பாடுபட்டு எங்களையெல்லாம்துணைக்கு வைத்துக்கொண்டுஆலமரத்தடிக்குக் கொண்டுவந்தார்

 

ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்த பிறகு ஜஸ்டிஸ் இயக்கம்இன்றைய தினம் நீண்ட நாளைக்கு ஆலமரத்தடியிலேஇருந்துவிடக்கூடாதென்று நான் மேலும் கொஞ்சம் விரிவானதிடலுக்கு அழைத்து வந்திருக்கிறேன்பெரியார் ராமசாமிஆலமரத்தடியிலே இருந்து கொண்டால் போதுமென்றுஎண்ணிவிட்டார்.

 

இவ்விதமான அரசியல் நிலைமை இன்று 1967-ல் என்ன ஆகும்எப்படி இருக்கும் என்று அறிய நமது நண்பர்களுக்குக் கொஞ்சம்எண்ணம் பிறந்தது.

 

நான் 1917-லிருந்து 57 வரை நடைபெற்றதைச் சொன்னதற்குக்காரணம் எப்படி நம்முடைய தலைவர்கள் போட்ட வித்துஇடையிலே நன்றாக முளைவிட்டுச் செழுமையானசெடியானாலும் இடைக்காலத்திலே அதை அழிப்பதற்குஎத்தனையோ பேர் முயற்சி செய்தாலும்எப்படி அது நல்லமுறையிலே வளர்ந்திருக்கிறதோ அதைப்போலத்தான் 57-லே நமக்கிருக்கின்ற இந்த வளர்ச்சி 67-ல் நாமே கண்டுஆச்சரியப்படத்தக்க அளவுக்கு மிக அதிகமானவளர்ச்சியாகப்போகின்றதுஇதிலே யாருக்கும் ஐயம்தேவையில்லை

 

1957-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிடமுன்னேற்றக் கழகத்தினுடைய கருத்துக்களைக் கேட்டுவாழுகின்ற தமிழகத்திற்கும் கிடைத்திருக்கின்ற நிலைமைகள்காரணமாக இன்னும் ஒரு பத்தாண்டு காலத்தில் இந்தப்பத்தாண்டு காலத்திலேதான் - மிக அதிகமான அளவுக்கு நல்லபலன் - உருவாகக்கூடிய பலன் நம்முடைய சமுதாயத்திலே ஏற்படஇருக்கிறது.

 

இதை யூகித்துத்தானோ என்னமோ நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்கள்கூட அண்ணாத்துரையை - திராவிட முன்னேற்றக்கழகத்துக்காரரை நான் கேட்டுக்கொள்ளுகின்றேன், நாட்டுப்பிரிவினையை விட்டுவிடுங்கள் விட்டுவிட முடியாவிட்டால் ஒருபத்தாண்டு காலத்திற்காவது அதை வலியுறுத்தாமல் இருங்கள்என்று சொன்னார்கள்.

 

நான் அதைச் சொல்லுகின்ற நேரத்திலே காங்கிரஸ்காரர்கள்சொல்லக்கூடும்அதைத்தான் சுப்பிரமணியம் அவர்கள்மறுத்துவிட்டாரேபத்திரிகையிலே வந்ததே என்றுஎப்பொழுதுமறுத்தார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்ஏன் மறுத்தார்என்பதையும் கவனிக்கவேண்டும்

 

தான் சொன்னதைத்தானே மறுக்கவேண்டிய அவசரத்திலே அவர்ஏன் பேசினார் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்நாங்கள் அவசரப்பட்டுப் பேசுகிறோம் என்றால் அதிலே அர்த்தம்இருக்கிறதுநாங்கள் அநுபவம் இல்லாதவர்கள்நிதியமைச்சர்சுப்பிரமணியத்திற்கு அநுபவம் இல்லை என்று சொல்ல முடியாதுஅரசியல் நிர்ணய சபையிலும்முன்னாலே இருந்தஅமைச்சரவையிலும் இருந்திருக்கின்றார்

 

ஆகவே நிரம்ப அநுபவம் பெற்றவர்தான் இவ்வளவு அநுபவம்இருக்கின்ற அவர் அவசரப்பட்டு அன்றைய தினம்பேசியிருக்கக்கூடாது என்பதை பின்னாலே உணர்ந்தார்.

 

அவர் சொன்னதும்கல்கத்தாவிலே இருக்கிற பத்திரிகைகளும்பம்பாய்டெல்லிபோன்ற வட நாட்டுப் பத்திரிகைகளும்தலையங்கம் எழுதி அவரைக் கண்டித்தனஎப்படி நீ பத்தாண்டுஒப்பந்தம் கேட்கலாம்

 

அவர்களோ நாட்டைப் பிரிப்பவர்கள்; அவர்களோபதினைந்துபேர்நீங்களோ 150-பேர் இருக்கிறீர்கள் - என்னஅவர்களுடைய ஒத்துழைப்புக்காக இந்தியாவின் ஆத்மாவைப்பறி கொடுக்கலாமா - இதற்கா நீ மந்திரியாக இருக்கிறாய் - என்றெல்லாம் கண்டபடி எழுதிவிட்டன.

 

நானும் மெத்த வருத்தப்பட்டேன்ஐய்யோ பாவம் இப்போதுதான்கொஞ்சம் உண்மை பேச ஆரம்பிக்கின்றார் - இன்னும் ஒருஐந்தாறுதடவையாவது பேசி அதற்குப் பிறகு இந்தப் பாவிகள்ஏதாவது சொல்லியிருந்தாலும் பரவாயில்லைமுதல் தடவையிலேசொல்லிவிட்டார்களேஇனி கொஞ்சம் விழிப்போடு இருப்பாரேஎன்று நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன்.

 

அதற்குப் பிறகு நிதியமைச்சர் சுப்பிரமணியம் தன்னுடையநிலைமையைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்றுஒருஉறுப்பினர் எழுந்து கேட்டார்அதென்ன நாட்டுப் பிரிவினையைப்பத்தாண்டுக்குத் தள்ளிப்போடச் சொல்லுகின்றீர்களே - நாட்டுப்பிரிவினையை நீங்கள் ப்புக்கொள்ளுகின்றீர்களா? என்று.

 

பொருளாதார முன்னேற்றத்தையும்சமுதாய முன்னேற்றத்தையும்மிக நல்ல முறையில் எய்தலாம்டில்லிக்கு நான் வந்து 10 நாட்களாகிறதுஎல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லைஎன்றாலும் நான் மரமடர்ந்த சாலைகளுக்குபுது தெருக்களுக்குசோலைகளுக்குச் சென்றேன்.

 

ஒரு சாலைக்காவது தென்னாட்டார் பெயர் வைக்கவேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்கு தோன்றாதது ஏன்?

 

இது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள் என்பதை காட்டவில்லையா?

 

திருமதிலட்சுமி மேனன்: (வெளிநாட்டு அமைச்சர்)

 

தியாகராஜரோடு என்ற ஒருரோடு இருக்கிறது.

 

ராம்ரெட்டிசங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு ரோடுஇருக்கிறதே?

 

ஒரு உறுப்பினர்இதைவிட உங்களுக்கு இன்னும் என்னவேண்டும்?

(மேலும் பல குறுக்கீடுகள்)

 

அண்ணாகனம் லிங்கம் அவர்களின் வாதம்பற்றி வியக்கிறேன்ஒரு தியாகராய ரோடினால் - அது சர் தியாகராயர் பெயரில்அமைந்ததோஅல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால்அமைந்ததோ தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால்நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்அதுமட்டும்தெற்கிற்குப் போதாது.

 

தெற்கே வாருங்கள்மோதிலால் நேரு சோலையில் உலவலாம்நேரு வாசக சாலையில் நுழையலாம்கமலாநேரு மருத்துவமனைக்குட் போகலாம்.

 

திருராமா ரெட்டிஇது ஒருமைப் பாட்டைக் காட்டுகிறது.

 

மன்றத் தலைவர்ஆர்டர்ஆர்டர்அவர் தொடர்ந்து பேசட்டும்.

 

அண்ணாஅபுல்கலாம் ஆசாத் ரோட்டில் போகலாம்அத்தகையவிஷயம் இங்கேன் இல்லைதெற்கே உள்ளவர்களின்எண்ணத்தைப் பாருங்கள்.

 

தெற்கைப் பற்றி பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, "அப்படிப் பேசாதேஎல்லாம் சரியாக இருக்கிறது” -என்கிறார்கள்.

 

இது பய உணர்ச்சியால் வருவதுதென்னகப் பிரதிநிதிகளாகஇருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளான திமுகழகத்தில் சேர்ந்து விட்டனரோஎன்று பிறர் அஞ்சுவார்களோஅதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டு விடுமோ எனஅஞ்சுகிறார்கள்எனவேதான் எழுந்து, 'அந்த ரோடு இருக்கிறதுஇந்த ரோடு இருக்கிறதுஎன்கிறார்கள்.

 

இது எனக்குத் தெரியாதாதென்னகத்திலிருந்து வந்திருக்கிறபிற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அறிந்திருப்பதுபோலவே நானும் அறிந்திருக்கிறேன்.

 

நான் ஒரு தேசியக் கொள்கைக்காக வாதாடுகிறேன்குறுகியமனப்பான்மைக்காக அல்லகட்சிக்கொள்கைக்காக அல்ல.

 

என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்ணய உரிமைகேட்கிறேன்அதன் மூலம்அந்நாடு உலகிற்கு தன் பங்கைச்செலுத்தவிருக்கிறது.

 

அய்யாஎங்களுக்கென்று ஒரு தனிக் கலாச்சாரம் உண்டு.

 

திராவிட நாட்டிலிருக்கும் கலாச்சாரத்துக்கும் பிறபகுதிகளிலுள்ள கலாச்சாரத்திற்கும் மேலெழுந்தவாரியாகஒற்றுமை நிலவலாம்!

 

மன்றத் தலைவர் அவர்களேகன்யாகுமரியிலிருந்து இமாலயம்வரை ராமனும் கிருஷ்ணனும் தொழப்படுவதால் இந்தியாஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பொரு தடவை கூறியபாண்டித்ய மிக்க வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது.

 

அதேபோல உலகமுழுதும் மரியாதையுடன் பயத்துடனும்ஏசுநாதர் தொழப்படுகிறார்இருந்தாலும் ஐரோப்பாவில் பலபலதேசீய நாடுகள் இருக்கின்றனபுதிய புதிய தேசிய நாடுகள்உலகில் வந்து கொண்டே இருக்கின்றன.

 

ஆகையால் தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம்பற்றி குடியரசுத் தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான்மெத்த வருந்துகிறேன்.

 

உடனே நிதியமைச்சர் பதில் உரைப்பதற்கு முன்னால்சட்டமன்றத் தலைவர் இது அப்பொழுது நடைபெற்ற விஷயம் - இப்போது அதைப்பற்றி கேள்வி கேட்பானேன் இப்போதுவேண்டாம் என்றார்.

 

உடனே நிதியமைச்சர் தானே எழுந்து “இல்லை இல்லைதலைவரவர்கள் அனுமதித்தால் நானே ஒரு விஷயத்தைச்சொல்லலாம் என்று இருக்கிறேன்நான் நாட்டுப் பிரிவினையைஏற்றுக் கொண்டவனல்ல -

நேற்றும் ஏற்றுக் கொள்ளவில்லைஇன்றும் ஏற்றுக் கொள்ளவில்லைஎன்றைக்கும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் - இந்தியாஒன்றுஅது பிரிக்க முடியாதது - நான் நாட்டுப் பிரிவினையைப்பத்தாண்டுக்கு ஒத்திவைக்கச் சொல்லி கேட்கவே இல்லை - நான்பத்தாண்டு ஒத்திவைக்கச் சொன்னது எதனையென்றால் நாசவேலையை - என்று அவர் சொல்லியிருக்கிறார்.

 

இது நியாயமாநாச வேலையைச் செய்யாதீர்கள் என்றுசொன்னால் அர்த்தம் இருக்கிறது - நாச வேலையைப் பத்தாண்டுசெய்யாதீர்கள் என்றால் பதினோராவது ஆண்டில் அதற்கு உரிமைகொடுக்கின்றார் என்று பொருளாநான் சாப்பிட்டுவிட்டுவருகின்றேன் அதற்குப் பிறகு கொட்டு என்றா தேளுக்குச்சொல்லுவார்கள்.

 

தேள் கொட்டும் என்று தெரிந்தால் அது எப்போது கொட்டாமல்பாதுகாப்பு தேடவேண்டும் நாசவேலை நாட்டிலே நடக்கும் என்றுதெரிந்தால் நாசவேலை அடியோடு கூடாது என்று சொல்லவேண்டுமே தவிர பத்தாண்டுகளுக்கு நாசவேலை வேண்டாம்என்றால் என்ன பொருள்?

 

ஏன் அவர் அந்த அளவுக்கு பொருளற்ற முறையில்சொல்லவேண்டி நேரிட்டதென்றால்ஏதாவது கூறிவிட்டால்வடக்கே இருக்கிறவர்கள் அவரைச் சந்தேகிக்கின்றார்கள்என்பதை முதல் தடவை நான் பேசுகின்ற கூட்டத்திலேயேநம்முடைய அமைச்சர் அவர்களிடத்திலே சொன்னேன். “ஐயாநீங்கள் ஆயிரம் தடவை தூற்றுங்கள்ஆனால்எங்களைக்காட்டியாவது வட நாட்டிலிருந்து நீங்கள் அதிகாரத்தைப் பெறஅதைப் பயன்படுத்துங்கள்” என்று சொல்லி நான் அதற்கு Sappers and Miners உதாரணத்தைச் சொன்னேன்பட்டாளத்திலிருக்கின்ற பல பிரிவுகளில் அதுவும் ஒன்று - பின்னாலே பீரங்கிப் பட்டாளம் வருகின்ற நேரத்திலே பாதையைச்சரிப்படுத்துவது அவர்களது வேலை.

 

"எங்களை அந்தப் பட்டாளத்தைப்போலப் பயன்படுத்துங்கள்என்று கூறினேன்அதற்கு நிதி மந்திரி சுப்ரமணியம் சொன்னார்அண்ணாதுரை சொன்னார்உண்மைதான்அப்படிச்செய்யலாமா என்று கூடத்தான் ஆசை இருக்கிறதுஆனால்இவரை எப்படி நம்புவதுஎதிரியினுடைய பாதையைச்சரிப்படுத்திவிட்டுப் போய் இவர் ஏதாவது புதிதாகச் சுரங்கவெடிவைத்துவிட்டால் நான் என்ன செய்யமுடியும்ஆகையினால்ஜாக்கிரதையாகத்தான் வருவேன்” என்று பாதுகாப்போடுசொல்லிவிட்டு இன்னொன்று சொன்னார். “இதை இவர்இப்போது வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரேஇதைவடநாட்டான் கேட்டுக்கொண்டு தானே இருப்பான்கேட்டுக்கொண்டிருந்தால் நானும் அண்ணாதுரையும் ஒன்று என்று அவன்சந்தேகப்படுவானே.

 

இதற்கு நான் என்ன செய்வேன்?” என்ற கருத்துப்படப் பேசிசட்டசபையிலே அவர் பரிதாபப்பட்டார்அப்படிப்பட்ட சந்தேகம்அவர் பேரிலே ஏற்படக்கூடாதென்பதற்குத்தான் பத்துஆண்டுகளுக்கு நான் ஒப்பந்தம் கேட்கவில்லை என்று அவர்சட்டசபையிலே பிறகு மறுத்துப் பேசினார்.

 

இந்தப் பத்து ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று நீங்கள்கேட்கிறீர்கள்தொடர்ந்து வரும்யாரார் பேரிலோ சந்தேகப்படுவார்கள்அவர்கள் யார் பேரிலே சந்தேகப்படுகிறார்கள் என்றுஇப்பொழுது சொல்ல முடியாதுதிடீரென்று ஒருநாளைக்குக்காமராசர் பேரிலேகூட அவர்களுக்குச் சந்தேகம் வரலாம்.

 

அது நாங்கள் கையாளுகின்ற முறையினாலே என்று நீங்கள்கருதவேண்டாம்காலம் காட்டுகின்ற குறி அப்படிச்செல்லுகின்றதுஏனென்றால் எதை ஒத்துக்கொண்டாலும்ஒத்துக்கொள்ளா விட்டாலும் இன்றையதினம் காங்கிரசிலேஇருக்கிற பெருந்தலைவர்களேகூட உள்ளூர உணருகின்றார்கள்

 

தென்னாட்டுக்குத் தேவையான அளவுக்கு முன்னேற்றம் இனிகிடைக்க வேண்டும் என்றால் மக்களை ஈடேற்ற வேண்டும்என்றால்இப்பொழுது இருப்பதைவிட அதிகமான அதிகாரம்கிடைத்தால் ஒழிய அந்தக் காரியத்திலே வெற்றிபெற முடியாதுஎன்பதைக் காங்கிரசிலே இருக்கிறவர்களே உணருகின்றார்கள்.

 

அவர்கள் நம்மைத் தூற்றுகின்றார்கள்நாம்உணர்ந்திருக்கின்றோம்நாம் நாட்டைப் பிரிக்கச்சொல்லுகின்றோம்நாச காலர்கள் என்றெல்லாம்ஏசுகின்றார்கள் - ஏசி முடிந்தபிறகு அவர்கள் தனியாகஇருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கே மனதில் தோன்றுகின்றஎண்ணம்உண்மைதானே இவர்கள் சொல்வது - எதற்கெடுத்தாலும் வடநாட்டிற்குத்தானேபோகவேண்டியிருக்கிறதுஎல்லா அதிகாரமும் அங்கேதானேகுவிக்கப்பட்டிருக்கிறதுநம்மிடத்திலே என்ன இருக்கிறதுஎன்ற அந்தக் கழிவிரக்கம் அவர்கள் உள்ளத்திலே இருக்கிறது.

 

நாலு நாளைக்கு முன் எங்கள் தொகுதிக்கு வந்த முதலமைச்சர்காமராசரை அங்கே உள்ளவர்கள் காஞ்சிபுரத்திற்கு ஒரு நூல்ஆலை தேவை என்று கேட்டார்கள் - அதற்கென்ன வைக்கலாம்என்றார் சொல்லிவிட்டு உடனேவைக்கலாம் ஆனால் 'கதிர்கிடைக்காதுஅது கொடுப்பதெல்லாம் டெல்லியிலே இருந்துஉத்தரவுவர வேண்டும் என்று சொன்னார்.

 

இதெல்லாம் முடிந்ததும் நான் அந்தக் காஞ்சிபுரம் நண்பரைப்பார்த்துக் காமராசர் என்ன சொன்னார் கேட்டீர்களா?

 

அவர் நல்லவர் அவர் செய்யவேண்டும் என்றுதான்ஆசைப்படுகின்றார்ஆனால் அதிகாரம் அவரிடத்திலே இல்லைஎல்லாம் டெல்லியிலே இருக்கிறது என்ற உடனே அவர் திராவிடமுன்னேற்றக் கழகத்தவரானார்இந்த கருத்து யாருக்குப்புரிகின்றதோ அவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக்கழகம்.

 

இது நாளாக நாளாக வளருமே தவிர குறையாதுஏனென்றால்வடநாடு வளர்ந்திருப்பது  நன்றாகத் தெரிகிறதுதேய்ந்திருக்கிறதென்னாடு மறுபடியும் முன்னேற வேண்டும் என்றால் முன்னாலேவளர்ந்திருக்கிற வடநாடு அதற்கு ஏற்றபடி இடமளிக்காதுஎன்பதும் இப்பொழுது ஓரளவுக்கு நன்றாகத் தெரிந்துகொண்டுவருகின்றது.

 

எப்பொழுதுமே உங்களுக்கு ஒன்று நான் சொல்லுவேன்காளியாயி வரங் கொடுக்காது என்பது பக்தனைவிடப்பூசாரிக்குத்தான் நன்றாகத் தெரியும்பூசாரி ஏதோ உடுக்கைஅடிக்கிறானே என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்அவன் வயிற்றுப்பிழைப்புக் கொடுமையாலே உடுக்கை அடிக்கிறானே தவிரஅவனையே நீங்கள் தனியாகக் கேளுங்கள்காளியாயி வரப்பிரசாதமா என்று - உங்களுடைய மடியை முதலிலே பார்ப்பான்.

 

பார்த்த உடனே நீங்கள் தேங்காய் கற்பூரம்வைத்துக்கொண்டிருந்தால் ஆகா இது கண்கண்டதெய்வமாயிற்றே கந்தசாமிக்குக் காளியாயிதான் கைகொடுத்தாள் - சாமிக்கண்ணுக்கும் காளிதான் கண் கொடுத்தாள்என்று சொல்லுவான்.

 

மடியிலே ஒன்றுமில்லாமல் விசாரிக்க மட்டும் கேட்டால் உடனேதிருப்பி அவனே கேட்பான் என்னடா பைத்தியக்காரனாகஇருக்கிறாய் காளி சக்தி வாய்ந்தவளானால் என்னை ஏன் இந்தநிலையிலே வைத்திருக்கிறதுஎங்கள் தகப்பன் பூசாரிநானும்பூசாரிஎன் மகனும் பூசாரி - இதுதான் இந்தக் காளியினுடையசக்திஎன்னையே கைதூக்கிவிடாத இந்தக் காளி உன்னைஎங்கே கை தூக்கிவிடப்போகிறது என்று பூசாரி சொல்வான்.

 

அதைப்போல டெல்லியிலே இருக்கிறது தேவதைஅது வரங்கொடுக்குமா கொடுக்காதா என்பது நம்மைப்போன்றவர்களுக்குக் கூட தெரியாதுஉடுக்கை அடிக்கிறார்கள்அல்லவா காங்கிரஸ் பூசாரிகள் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

 

மூன்றுதடவை அடித்துப் பார்த்தார்கள்தேவிகுளம் பீர்மேடுபிரச்சினை இருக்கிறதே அதைப்போல் தமிழர்களுக்குநியாயமான அப்பழுக்கற்ற பிரச்சினை வேறு ஒன்றுமேகிடையாதுதமிழர்கள்தான் அங்கே வாழுகின்றார்கள் என்றுநம்முடைய சென்னை சர்க்காரும்புள்ளிவிவரங்களைக்காட்டியிருக்கிறது.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேவிகுளம் பீர்மேடுதமிழர்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்மானம்போட்டிருக்கிறார்கள்நாங்களே வாங்கிக்கொடுப்போம் என்றுஇதே மதுரையில் கூட காமராசர் பேசியிருக்கிறார்டெல்லிஎன்ன செய்தது?

 

கேரளத்தார் கேட்கிறார்கள்ஆகையினால் அங்குதான் இருக்கவேண்டும் என்றார்கள்என்ன செய்தார்கள் காமராஜர்கள்இவர்கள் ஒன்றும் வடநாடு தென்னாடு என்று பேசவேண்டாம்நாங்கள் ஒன்றும் வடநாட்டுக்கு அடிமையல்ல எங்களாலேநிமிர்ந்து நிற்கமுடியும்நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம்குற்றமே என்று சொன்ன நக்கீரன் பரம்பரை என்றெல்லாம் மாலைநேரத்திலே பேசுகின்றார்கள் - மதிப்புக்குரிய காங்கிரஸ்தோழர்கள்இவர்கள் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையிலேநம்முடைய அப்பழுக்கற்ற நியாயத்தை டெல்லி ஒத்துக்கொள்ளாத நேரத்தில் என்ன செய்தார்கள்ஒரு கணம்புருவத்தை நெறித்துப் பார்த்தார்களாதேவிகுளத்தைப்பெறாமல் திரும்பமாட்டேன் என்று சொன்ன அமைச்சர் யார்தேவிகுளம் கிடைக்காவிட்டால் அமைச்சராக இருக்கமாட்டேன்என்று சொன்னவர் யார்?

 

நீதிக் கட்சியாரைப் பார்த்து அப்போது ஆயிரம் மேடையிலேகேட்டிருக்கின்றார்கள்பிசின் போட்டா ஒட்டியிருக்கிறதுஎன்றுஇன்றையதினம் இவர்கள் பிசின் போடாமலே அல்லவாஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்நீதிக் கட்சிக்குப் பிசின்போட்டார்கள்வெள்ளைக்காரன் போட்ட பிசினில் ஒட்டிக்கொண்டார்கள் - இப்போது பிசின் போடுவதற்கு ஆளேகிடையாதுபிசின் போடுவதற்கு ஆளே இல்லாத நேரத்தில்இவர்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால்அதற்குஏதாவது நான் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்அட்டையைப் போல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்என்றுதானே சொல்லுவேன்.

 

அதைத் தள்ளிவிடுங்கள்அது நாட்டுப் பிரச்சினைஇவர்களுடைய ஏட்டிலேயே கணக்கெழுதினார்கள் இரண்டாவதுதிட்டத்தில் 400 கோடி தேவை என்றுஎன்ன கொடுத்தார்கள் - கிடைத்தது என்னஇவர்கள் எங்கே வடநாட்டு ஆதிக்கத்திலேஇருந்து விடுபட்டார்கள்?

 

கைத்தறிக்கு கரை போட்ட வேட்டியும் சேலையும் ஒதுக்குங்கள்என்று சாதாரணப் பேச்சல்ல -சட்டசபைத் தீர்மானம் நிறைவேற்றிஅனுப்பினார்களேஎன்ன ஆயிற்று?

 

டெல்லி என்ன மதிப்பளித்தது?

 

ஆகையினாலேதான் வடநாடு தென்னாட்டிலே உள்ளவர்களைஎப்படியெப்படி மட்டந்தட்டுகின்றது என்பதை அவர்கள் நன்றாகத்தெரிந்துகொண்டிருக்கிறார்கள் நம்மைவிட. அதை இன்றையதினம் வெளியே சொல்லாமல் இருப்பதற்குக் காரணம் நான்உங்களுக்குச் சொன்ன கதையை நினைவுபடுத்திக் கொண்டால்தெரியும்காளி வரம் அளிப்பவள் அல்ல என்று பூசாரிசொல்லிவிட்டால் பிறகு உடுக்கை அடித்துப் பிழைக்கின்றபிழைப்பு என்ன ஆகும்?

 

அதைப்போல காங்கிரஸ் அமைச்சரே பார்த்து எங்களுக்கு ஒருஅதிகாரமுமில்லைஎல்லாம் வடக்கேதான் இருக்கிறது என்றுசொன்னால் பிறகு இவர்களை யார் மதிப்பார்கள்?

 

ஆகையினால்தான் பூசாரிக்கு வேலை கிடைக்க வேண்டும்என்பதற்காக உடுக்கை ஒலி கேட்கிறதே தவிர காளியினுடையவரம் ஒன்றும் கிடைக்கவில்லை.

 

அது கிடைக்க வேண்டும் என்றால் இந்தப் பத்தாண்டிலேகிடைத்தால்தான் உண்டுஇந்தப் பத்தாண்டுகளிலே நாம்செய்கின்ற செயல் எந்த அளவுக்குப் பலிக்கின்றதோ அதைப்பொறுத்துத்தான் அடுத்த தலைமுறைக்குத் தன்மானமுள்ளவாழ்வு.

 

இந்தப் பத்தாண்டிலே நாம் செய்கின்ற முயற்சிதோற்று விட்டால்பிறகு நீங்கள் கல்லின் பேரிலே பொறித்து வைத்துக்கொள்வதைப்போல் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம்.

 

ஆப்பிரிக்கா நாட்டிலே இருக்கிற நீக்ரோக்களும் அமெரிக்கநாட்டிலே இருக்கிற சிகப்பிந்தியர்களும் எந்தக் கதியைஅடைந்தார்களோஅதே கதிதான் இங்கே பிறந்து வாழ்ந்துவருகின்ற பழந்தமிழ் மகனுக்குக் கிடைக்குமே தவிர வேறுஎந்தமாதிரியான முற்போக்கும் கிடைக்காது.

 

பால் பொங்கி வருகின்ற அந்தப் பக்குவமான நேரத்தில்தாய்மார்கள் குழந்தை அழுதாலும் எழுந்து போகமாட்டார்கள்.

 

பால் பொங்குவது தெரிந்தால் கருத்துள்ள தாய் அழுகின்றகுழந்தையைக்கூட பின்னாலே பார்த்துக் கொள்ளலாம் என்றுபொங்குகின்ற பாலில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பால்பானையைக் கீழே இறக்கி வைத்துவிட்டுத்தான் தொட்டிலிலேஅழுது கொண்டிருக்கிற குழந்தைக்குத் தன்னுடைய பாலைத்தருவதற்குச் செல்லுவார்கள்.

 

இந்தப் பத்தாண்டு பால் பொங்குகின்ற காலம் இந்தப்பத்தாண்டிலேதான் யார் யார் நம்முடைய கருத்துக்களைக் கேட்கமறுக்கின்றார்களோ அவர்களுடைய செவி வழி நமதுகருத்துக்கள் நுழைந்து உள்ளத்திலே தங்கி அவர்களை எல்லாம்நம் பக்கத்திலே ஈர்த்துக்கொண்டு வருகின்ற பக்குவமான காலம்.

 

பதினைந்து பேர் திமுகழகத்தைச் சேர்ந்தவர்கள்சட்டசபைக்குப் போனோம்போனவுடனே திராவிட நாடுபிரிவினை விஷயம் இதற்கு முன்னாலே பத்து வருஷத்திலேஎவ்வளவு வளர்ந்ததோ அந்தப் பத்தாண்டு வளர்ச்சியை இந்தமூன்று திங்கள் நமக்குத் தந்திருக்கின்றது என்று நான்சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள்ஆனால் அதுமிகைப்படுத்திச் சொல்வதல்ல.

 

வெளி நாட்டுப் பத்திரிகை இப்பொழுதுதான் எழுதுகிறதுதிராவிட நாட்டுப் பிரிவினை என்று கேட்டுக்கொண்டு திராவிடமுன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சி பத்துப் பதினைந்து பேர்சட்டமன்றத்திலே இருக்கிறார்களாம் - என்று எழுதுகிறது.

 

பருவம் அடைதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லகட்சிகளுக்கும் உண்டுஅந்தப் பருவம் அடைகின்ற பக்குவம்இருக்கிறதே ஒரு கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கு உள்ளேநுழைகின்றபோதுதான் அந்தப் பருவம் அடைகின்றது என்றுபொருள்.

 

அதே நேரத்தில் பருவம் அடைகின்ற நேரத்தில்தான் ஆபத்தும்வருகின்றது என்பதை நான் உணராமல் இல்லைஅதுஉடலுக்கும் சரிஅரசியலுக்கும் சரி அதுதான் ஆபத்துஅளிக்கக்கூடியது.

 

ஆனால் ஒன்றை நீங்கள் தெளிவாக நம்பலாம்ஆபத்துக்கள்வராமல் பாதுகாப்பதற்கும்வரக்கூடிய ஆபத்துக்களைதவிர்ப்பதற்கும் ஆபத்தை மூட்டலாம் என்று எண்ணிக்கொண்டுவருகின்றவர்கள் ஆபத்திலே சிக்கிக்கொண்டோமே என்றுபின்னாலே அல்லற்படுகின்ற அளவுக்கும் எனக்கு இயற்கையாகஇருக்கிற அறிவோடுகூட பெரியார் இராமசாமி நல்ல பயிற்சிஅளித்திருக்கின்றாரேஅதுவும் சேர்ந்து தக்கபடி பயன்படும்.

 

சுலபத்திலே நான் ஏமாறமாட்டேன்அவராலேயே என்னைசபலமடையச் செய்ய முடியவில்லை என்றால்தமிழ் நாட்டிலேவேறு யாரிடத்திலே நான் ஏமாறுவேன்ஆகையினாலே நல்லபக்குவப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் திமுகழகம்பிறர்வசப்படும்படியோ பிறருக்கு அஞ்சும்படியோ நாங்கள் எந்தக்காலத்திலும் நடந்துகொள்ள மாட்டோம்அதேபோலவேசட்டசபையிலும்நாங்கள் சென்றிருப்பது காங்கிரஸ்அமைச்சர்களை ஏசுவதற்கு அல்ல என்பதை நான்சட்டசபையிலும் சொன்னேன்இங்கேயும்

சொல்லுகின்றேன்.

 

அதைப்பற்றி இரண்டு மூன்று திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்கள் சட்டசபைக்குப் போனால் அவர்களுக்கு மூன்றுகடமைகள் இருக்கின்றனஒன்றுஅவர்கள் எந்தத் தொகுதியிலேதேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்தத் தொகுதி மக்களுக்குச்செய்யவேண்டிய நன்மையைச் சாதிக்க வேண்டிய கடமைஇருக்கிறது.

 

மற்றொன்றுஅந்தச் சட்டசபையிலே விவாதத்துக்கு வருகின்றஎல்லாப் பிரச்சினைகளின் பேரிலும் இயக்கத்துக்குமாறுபாடில்லாத கருத்துக்களை தந்து தீரவேண்டும் - மூன்றாவதுகடமைஅவர்கள் எந்த இயக்கத்தின் தூதுவர்களாக அங்கேசென்றிருக்கிறார்களோஅந்த இயக்கத்தினுடைய அடிப்படைக்கொள்கை - மூலாதாரமான கோட்பாடு - சிறிதும் கெடாதவகையிலே பணியாற்ற வேண்டும்.

 

சட்டசபைக்குப் போகின்றவர்கள் யாராக இருந்தாலும் சரிஎந்தக்கட்சியாக இருந்தாலும் மூன்று காரியங்கள் அவர்களுக்குஇருக்கின்றனதொகுதியினுடைய முன்னேற்றத்தைக் கருதிக்கொள்கையையும் விட்டுவிடக்கூடாதுகொள்கையை மட்டும்மனதிலே வைத்துக்கொண்டு தொகுதி எக்கேடு கெட்டாலும்எனக்குக் கவலையில்லை என்றும் இருக்கக்கூடாதுதொகுதியையும் பார்த்து சட்டத்தைப்பற்றிய விவாதத்திலேயும்கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையஅடிப்படைக் கருத்துக்களை இழந்துவிடக்கூடாதுஇந்தமூன்றையும் ஒருசேர நடத்திக்கொண்டு செல்வதுதான்பக்குவமான பாராளுமன்றப் பண்புஅதைத் திராவிடமுன்னேற்றக் கழகம்இதுநாள் வரையில் சரியான முறையில்நடத்திக்கொண்டு வருகிறது என்பதுதான்அரசியல்வட்டாரத்திலே அனுபவப்பட்டவர்கள் எங்களிடம் எடுத்துச்சொல்லியிருப்பது - நாங்களும் மனதார நம்பி இருப்பது.

 

அங்குக் கொண்டுவரப்படுகின்ற எந்த விவகாரமானாலும்எந்தச்சட்டங்களானாலும்அவைகளிலே இருக்கின்ற நெளிவு சுளிவுக்குஏற்றபடி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்தங்களுடைய கருத்துக்களைத் தரத் தயங்குவதில்லைகருத்துக்களைத் தருகின்ற நேரத்திலேயும் அவர்கள் அதற்கானமாற்று நோக்கங்களையும் சொல்லாமலிருக்கவில்லைஅதேநேரத்தில் காரணமற்று காங்கிரஸ்காரர்களை பகைத்துக்கொள்வதில்லை.

 

நீங்கள் கூர்ந்து பார்த்தால் தெரிந்திருக்கும் - எல்லாவிவாதங்களிலேயும் எதிர் தரப்பிலே இருந்து பேசிய திமுகழகம்இரண்டே இரண்டு பிரச்சினைகளிலேதான் ஓட்டுக்குவிடவேண்டுமென்று நாங்கள் கேட்டோம்மற்றவைகளிலெல்லாம்அவர்களுக்குப் பெரும்பான்மை இருக்குமென்று எங்களுக்குத்தெரியும் - நாங்கள் 15-பேர்தான் என்பது உலகறிந்த உண்மை.

 

ஆகையினாலே கணக்கிடு என்று கேட்கவில்லைஅந்த இரண்டுபிரச்சினைகளிலே கணக்கெடுக்கச் சொன்னதற்குக் காரணம்இது எங்கள் கட்சிக்கு சம்மந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்லநாட்டுக்குச் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்பதாலே நாங்கள்ஓட்டெடுக்கச் சொன்னோம்அதிலே ஒன்று இந்த நாட்டுக்குத்தமிழ் நாடு” என்று பெயர் வைக்கவேண்டும் என்ற பிரச்சினை, 3 - பே. அ. சொ, தொ-2. பூவெஎண். 600

 

அதன் பேரில் அதற்காக நாங்கள் கொடுத்த வெட்டுப்பிரேரேபணையில் எல்லா நண்பர்களும் பேசியான பிறகுஅதற்குக் காங்கிரஸ்காரர்கள் மறுத்துப் பேசியான பிறகுசட்டமன்றத் தலைவர் எழுந்துஇந்த வெட்டுப் பிரேரேபணையைநீங்களெல்லாம் வாபஸ் வாங்கிக்கொள்ளுகிறீர்களா என்றார்.

 

நான் திமுகழகத்தின் சார்பில் எழுந்து சொன்னேன். “எல்லாவெட்டுப் பிரேரேபணையையும் நான் வாபஸ்வாங்கிக்கொள்ளுகின்றேன். “தமிழ்நாடு” என்று பெயரிடும்பிரேரேபணையை மட்டும் நான் வாபஸ் வாங்கிக் கொள்ளத்தயாராக இல்லை அதன் பேரிலே ஓட்டெடுக்க வேண்டும்” என்றுகேட்டேன்.

 

கம்யூனிஸ்டுகளும் ஆமென்றார்கள்சோஷியலிஸ்டுகளும் ஆம்என்றார்கள்பிரஜா சோஷியலிஸ்டுகளும் சரியென்றார்கள்.

 

காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியினர்சுயேச்சையாளர்கள்எல்லோரும் ஆமென்றார்கள்ஓட்டெடுத்தால் எதிர்தரப்பிலேஇருந்த அத்தனைபேரும் “தமிழ் நாடு” என்ற பெயர் தேவைஎன்பதற்காக எழுந்து நின்றோம்காங்கிரஸ் - தரப்பிலே இருந்த150 பேரும் “தமிழ் நாடு” வேண்டாம் என்பதற்கு எழுந்து

நின்றார்கள்.

 

ஏன் நாங்கள் அது ஒன்றின் பேரிலே மாத்திரம் ஓட்டெடுத்தோம்எங்களுக்குத் தெரியும் தோற்றுவிடுவோமென்றுஆனால் யார்யார் தமிழர்தமிழ் நாட்டிற்குத் "தமிழ் நாடுஎன்றுவேண்டாமென்று சொல்கின்றவர்கள் என்பதை நாடு பார்க்கவேண்டாமாநம்முடைய மதுரையம்பதி உறுப்பினர்இருக்கின்றாரே - நண்பர் சங்கரன்அவர்கூட எழுந்து நின்றார்அவர் எழுந்து நிற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னாலேதான்எங்களுக்குக்கூட புத்தி சொன்னார் - தமிழ்தமிழ் நாடுஎன்றாலே இவ்வளவு தீவிரமாகப் பேசுகின்ற இந்த திமுகழகத்தார் தங்களுடைய கழகத்தின் பெயரை தமிழ்முன்னேற்றக் கழகம் என்று மாற்றிவிடக்கூடாதா என்றுஅப்படிஎங்களுக்குச் சிபாரிசு செய்த நம்முடைய நண்பர் சங்கரன்அவர்களும் எழுந்து நின்றார்நான்கூட அவரைப் பார்த்துஅவர்நின்றபோதுஎன்ன கம்பீரமாக நிற்கின்றாரா இல்லையா என்றுபார்த்தேன்தலை குனிந்துதான் நின்றார்ஏனென்றால்அவருக்குத் தெரியுமல்லவா.

 

தமிழ் நாட்டிலே பிறந்துஅவர் தொட்டிலிலே படுத்த காலத்திலேபேசியது தமிழ்மொழி - அவர் இன்றைய தினம் கட்டிலிலேபேசுவதும் தமிழ் மொழிகோர்ட்டிலே பேசுவதுவேண்டுமானால்ஆங்கிலமும் தமிழும் கலந்ததாக இருக்கலாம்அப்படிப்பட்டவர்இந்த நாட்டுக்குத் தமிழ் நாடு என்ற பெயர் வேண்டாமென்றுகட்சிக் கட்டுப்பாட்டுக்குத் தானே எழுந்து நின்றார்அவர் எழுந்துநின்றதுகூட அவ்வளவு ஆச்சரியமில்லைதமிழருடையஎல்லையில் ஒரு ஆங்கிலம் நுழையக்கூடாது என்றெல்லாம்பாடுபடுகின்றவர்நண்பர் விநாயகம் அவர்கள்அவரும் எழுந்துநின்றாரேஅவர் எழுந்து நின்றபோதுகூட நான்திரும்பிப்பார்த்தேன் - “ஏனய்யா நீ கூடவாஎன்றேன்அவர்என்னை திரும்பிப் பார்த்தால்தானே!

 

வயதான ஒரு கணவனுக்கு இளம் பெண்ணைக் கலியாணம்செய்துகொடுத்தால்அந்த இளம் பெண் கணவனின் முகத்தைஉற்றா பார்த்துக் கொண்டிருப்பாள்தரையிலேயே பார்த்துக்கொண்டிருப்பதைப்போல்பாவிகள் நம்மை இப்படியெல்லாம்அலட்டி வைக்கிறார்களே என்று எண்ணிக்குனிந்துகொண்டார்கள்நாங்கள் எல்லாம் நிமிர்ந்து பார்த்துக்கொண்டோம்.

 

தமிழன் தன்னுடைய நாட்டுக்கு “தமிழ் நாடு” என்றுதானே பெயர்வைப்பான் என்று காட்டுவதற்கு எழுந்து நின்றோம்தமிழ்நாட்டுக்கு "தமிழ் நாடுஎன்று பெயர் வைப்பது கூடவேண்டாமென்று சொல்லுகிற தமிழர்கள் இவ்வளவு பேர்இருக்கிறோமே என்ற வெட்கத்திலே அவர்கள் எழுந்துநின்றார்கள்ஆகையால் காமராசரை உட்கார்ந்து கொண்டேகேட்டேன், "தமிழ் நாடு வேண்டாமென்று சொல்லுகிற தமிழர்கள்இவ்வளவு பேரை அழைத்துக்கொண்டு வந்தீர்களேநல்லசாமர்த்தியசாலி ஐயா நீங்கள்!” என்றேன்

 

அதற்கு அவர் “பரவாயில்லை பார்க்கலாம்பார்க்கலாம்” என்றார்.அந்தப் பிரச்சினையிலே ஓட்டெடுத்தாலே என்ன சாதித்துவிட்டீர்என்று கேட்கலாம்பெரியார் இராமசாமிகூட இப்படிக் கேட்பதாகநான் கேள்விப்படுகிறேன்என்னவோ இந்தப் பயல்கள்நான்இவ்வளவு எதிர்த்தும் என் பேச்சைக்கூடக் கேட்காமல் உள்ளேபோய்விட்டார்களேஎன்னத்தைச் சாதித்தார்களாம்?” என்று.

 

நாங்கள் உடனடியாக எதையும் சாதிக்கவில்லைஎதைச்சாதித்தோமென்றால் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு புதுஅத்தியாயத்தை எழுதி இருக்கிறோம்அது இப்போது தெரியாதுநம்முடைய பேரன் படிக்கப் போகிறான்அவன் படிக்கிறபோதுஒரு பக்கத்தில் இந்த நாட்டுக்குச் சென்னை என்றுபெயரிருந்தது என்று எழுதி இருக்கும்அவன் பக்கத்திலேஇருக்கிற நண்பனைப் பார்த்துக் கேட்பான் – நம்முடையபெரியவர்கள் பார்த்தாயா எவ்வளவு பைத்தியக்காரர்களாகஇருந்திருக்கிறார்கள்நம் நாட்டுக்கு மதறாஸ் என்று பெயராமேஏன் என்று கேட்பான்இல்லை இதற்குத் தமிழ்நாடு என்றுதான்பெயர் - மெட்ராஸ் என்று பெயரிட்டார்கள் - பிறகு தமிழ் நாடுஎன்று மாற்றிப் பெயரிட்டார்கள்.

 

அப்படி மாற்றுவதற்கு யார் பாடுபட்டவர்கள்?”

"இன்னின்னார் பாடுபட்டார்கள்"

எந்த முறையிலே பாடுபட்டார்கள்?"

சட்ட சபையிலே தீர்மானம் கொண்டு வந்தார்கள்?”

"கொண்டு வந்தபோது மெஜாரிடி கிடைத்ததா?”

கிடைக்கவில்லை!"

யார் யார் வேண்டும் என்றார்கள்?”

“15-பேர் வேண்டும் என்றார்கள்.”

யார் யார் தமிழ்நாடு வேண்டாமென்றார்கள்?”

“150-பேர் வேண்டாம் என்றார்கள்

தமிழ்நாடு வேண்டாம் என்ற தமிழன்கூடவா அந்தக்

காலத்தில் இருந்தான்?”

ஆமாம் ஐயாஇருந்தான்

அவன் இப்போது எங்கே இருக்கிறான்?”

அவர் இப்போது இல்லை அவருடைய பேரன் அதோ பார்இருக்கிறான்

 

நண்பர்களே நீங்கள் தெளிவாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 15-பேராக இருக்கிற நாங்கள் இந்தக் காலத்து வரலாற்றைஎழுதவில்லை எதிர்கால வரலாற்றைஎழுதிக்கொண்டிருக்கிறோம்கண்ணீரால் எழுதுகிறோம் எங்கள்இரத்தத்தால் எழுதுகிறோம் எங்கள் வியர்வையால்எழுதுகிறோம் - அது உலர்வதற்குப் பத்து ஆண்டுகள்பிடிக்கலாம் - 20 ஆண்டுகள் பிடிக்கலாம்ஆனால் அந்தவரலாற்றில் எழுதப்படுகின்ற ஒவ்வொரு வாசகமும்எதிர்காலத்தில் நம்முடைய நாட்டினுடைய எதிர்காலத்தலைமுறைக்கு ஏற்படுகின்ற மன எழுச்சிக்கு உறுபடையாகஅமையும்.

 

அதைப்போலவே இரண்டாவதாக நாங்கள் ஓட்டுக்குவிட்டதுகைத்தறியாளர் பிரச்சினைஅதற்கும் காங்கிரஸ்காரர்கள் எழுந்துநின்றார்கள்கைத்தறி நெசவாளர்களது ஓட்டு வாங்கியகாங்கிரஸ்காரர்களும் எழுந்து நின்றார்கள்இந்த (தெற்குபக்கத்திலிருந்து வந்திருக்கின்ற காங்கிரஸ்உறுப்பினர்களெல்லாம் கூட கைத்தறி நெசவாளர்களைப் பற்றிகசிந்து கண்ணீர் மல்கிப் பேசினார்கள்அவர்களுடைய நல்லஎண்ணத்தை நான் பாராட்டுகிறேன்நல்ல உணர்ச்சியை நான்மதிக்கிறேன்

 

ஆனால் கட்சிக் கட்டுப்பாடு காரணமாக அவர்கள்கூட எழுந்துநின்று அதற்கு எதிர்த்துத்தான் ஓட்டளித்தார்கள்.

 

இந்த இரண்டு விவகாரங்களில் மட்டும் நாங்கள் ஓட்டெடுத்தோம்மற்றவற்றில் எல்லாம் ஓட்டெடுக்கவில்லை.

 

இதிலேயிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் - கழகத்தினுடைய உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அடிப்படைக்கொள்கைகளை மறக்காமல் பணியாற்றுகின்றார்கள் என்றுஅதேநேரத்தில் தங்கள் தொகுதிக் காரியத்தையும்கவனித்துக்கொண்டு வருகின்றார்கள்தொகுதிக் காரியங்களைக்கவனிப்பதற்குத்தான் முதல் அமைச்சர் காமராசரை நான்என்னுடைய தொகுதிக்கு அழைத்துக்கொண்டு போனேன் - சிலநாட்களுக்கு முன்னால் சட்ட சபையிலே இருக்கும்போதுஒருநாள் பேச்சோடு பேச்சாகக் கேட்டேன் - எங்கள் தொகுதிக்குவருகிறீர்களா என்று.

 

அதற்கென்ன வருகிறேன்” என்றார்வருகிறேன் என்று அவர்சொன்ன நேரத்திலே அவருடைய மனதிலே ஒரு எண்ணம்இருந்திருக்கக்கூடும் - அந்தத் தொகுதிக்குப் போவோம் - யார்யார் இந்த அண்ணாதுரைக்கு உதவி செய்கிறார்கள் என்றும்பார்க்கலாம் - இவர்களுக்கு யார் யார்செல்வாக்களிக்கிறார்களோஅவர்களை நாமே நேரிலே சந்தித்துநமக்காக அந்த செல்வாக்கைத் தேடிக்கொள்ளலாம் என்றஎண்ணத்திலே அவர் வந்திருக்கக்கூடும் - அதை நான்அறியாதவனல்ல

 

ஆனால் என்னிடத்திலே இருக்கின்ற சரக்கு சாயம்போகாத சரக்குஎன்கிற காரணத்தினால் நீ துவைத்துப் பார்த்துக்கொள் என்றுசொல்லி விட்டு விட்டேன்நான் அவரை அழைத்ததனுடையகாரணம் என்ன நானோ நான் சாந்திருக்கிற கட்சியோ மெஜாரிடிகட்சியல்ல - மைனாரிடி கட்சிஆகையால் தொகுதிக்குச் செய்யவேண்டிய காரியத்தை நாங்களே உத்தரவு போட்டுச் செய்யமுடியாதுயார்

கையிலே பேனா இருக்கிறது - உத்தரவு போட வேண்டியபெருமகன் யாரென்பதை எங்களுடைய தொகுதி மக்களுக்குக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்ஆகையால் நான்அழைத்துக் கொண்டு போய் அவரை உட்கார வைத்துஜனங்களுக்குக் காட்டினேன் “இதோ பாருங்கள்இவர்தான்முதல் மந்திரிஇவர்தான் உடைந்துவிட்ட ஏரிக்கரையைச்சரிப்படுத்த வேண்டும்இவர்தான் அந்த மதகை 'ரிப்பேர்செய்யவேண்டும் - இவர்தான் வாய்க்கால் உடைப்பை சரி செய்யவேண்டும் - நீங்கள் வரி கொடுப்பது இவரிடத்திலேதான்இதைச்செய் என்று கேட்பதுதான் என்னுடைய வேலைஎன்ன ஐயாநீங்கள் சொல்லுங்கள்” என்றேன்இதுஅந்தத் தொகுதிக்குசம்மந்தப் பட்டவன் என்ற முறையில் நான் செய்யக்கடமைப்பட்டிருக்கிறேன்.

 

ஆனால் அந்தத் தொகுதிக்கு நல்ல காரியங்களைச் செய்தால்நானும் மனதாரப் பாராட்டுவேன்அவர் செய்யத் தவறிவிட்டால்என்னுடைய தொகுதி மக்களிடத்திலே மறுபடியும் போய் நான்சொல்லுவேன் “என்னய்யா செய்யச் சொல்லுகிறீர்கள் அவரையும்தான் அழைத்துக் கொண்டுவந்து காட்டினேன்

 

நேரடியாகவே பார்த்தாரே என்பேன்அவர்களே சொல்லுவார்கள் - அந்த மனிதன் அன்று வந்தபோது ஒழுங்காத்தானே பேசினார்ஏழைகளுடைய கஷ்டம் எனக்குத் தெரியுமென்று சொன்னாரேஇன்னும் தெரியவில்லையே - என்று அவர்கள் சொல்லுவார்கள்.

 

அதற்குப் பிறகு 5 வருஷத்துக்குப் பிறகு தேர்தலில் பதில்அளித்துவிடுவார்கள் - அது அவர்கள் சம்மந்தப்பட்டது - நான்சம்மந்தப்பட்டதல்லஆகையினாலே அந்தப் பிரச்சினையிலும்நான் கலந்து கொண்டேன்.

 

அதைப்போலவே இரண்டாவது பிரச்சினையிலும் நான்கலந்துகொண்டேன்அங்கே வருகின்ற சட்டங்களின் பேரில்எங்களுடைய கருத்துக்களைச் சொல்லவேண்டும்இப்போதுநடைபெற்ற சட்டசபை நடவடிக்கையைப் பொறுத்தவரையில்புதிதாக எந்தச் சட்டமும் வரவில்லைபுதிதாக ஏதாவது நாட்டுமக்கள் உள்ளத்தினை உலுக்க கூடிய சட்டம் வந்தால் திமுகழகத்தினுடைய கருத்துக்கள்

அதிலே எடுத்துச் சொல்வதற்குவழியிருக்கும்இப்போது நாங்கள்செய்திருப்பதெல்லாம் சத்திரத்திலே இருக்கின்ற ஐயர் பத்துபேருக்குச் சமையல் செய்து இருபது பேருக்கு அதைச் சமஅளவில் பங்கிடுகின்ற அந்த முறைப்படி - காமராஜர் வெறும்நிர்வாகத்தை நடத்திக்கொண்டு போகிறார்புதிதாக எந்தச்சட்டத்தையும் இன்னமும் கொண்டுவரவில்லைஆச்சாரியார்கொண்டு வந்ததைப்போல் கேடு தருகின்ற சட்டமானாலும் சரி - அல்லது நாமெல்லாம் எதிர்பார்க்கின்றபடி நல்லது தருகின்றசட்டமானாலும் சரி -

நாட்டு மக்களுடைய உள்ளத்தை உலுக்கக்கூடிய ஒரு சட்டம்வருமானால் அந்தச் சட்டத்தில் நாங்கள் தெளிவாக எங்களுடையகருத்துக்களை அப்போது எடுத்துச் சொல்லக்கடமைப்பட்டிருக்கின்றோம்.

 

ஆனால் காமராசர் ஆட்சியில் அப்படிப்பட்ட அடிப்படைச்சட்டங்கள் வருமா என்பதில் எனக்குக் கொஞ்சம் ஐயப்பாடுஉண்டுஏனென்றால் காமராசருடைய கருத்து அத்தனையும்உள்ளே இருக்கின்றவரையில் காலத்தை ஓட்டிக்கொண்டுபோகலாம் என்று எண்ணுகின்றவராகத்தான் எனக்குத்தெரிகின்றதே தவிரநம்முடைய காலத்திலே இதைச்சாதித்தோம் - நம்முடைய காலத்திலே இதை நிறைவேற்றினோம்என்று சுட்டிக்காட்டிப் 'பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்என்ற மனப்பான்மையோடு அவர் இருப்பதாக எனக்குத்தெரியவில்லைஅவரிடத்திலே நான் காணுகின்ற குணமெல்லாம்மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் - நன்மை செய்யலாம் என்றஅந்த அளவுக்குத்தான் இருக்கிறதே தவிர மக்களுக்கு நன்மைசெய்ய வேண்டுமானால் அதற்கு எதையெதை அடிப்படையிலேமாற்றவேண்டும் என்பதில் அவர் தீவிரமான கருத்தைக்கொண்டவராக எனக்குத் தெரியவில்லை.

 

1967 என்பதுநாம் இப்பொழுது நடந்துகொண்டு செல்லுகின்றபாதையில் நம்மை ஒரு முக்கியமான கட்டத்திற்கு அழைத்துவரஇருக்கின்றது - பத்து ஆண்டுக் காலத்தில் நான்உங்களிடத்திலே உள்ளத்தைத் திறந்து சொல்லுகின்றேன்.மாபெரும் போராட்டங்கள் நம்முடைய நாட்டு விடுதலைக்காகநேரிடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்அந்த மாபெரும்போராட்டங்களில் நம்முடைய கழகத்திலே ஈடுபாடு கொண்டஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களை இன்றைய தினம்முதற்கொண்டே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்நாம்சட்டசபையிலேயே உறுப்பினர்களாக இந்தப் பத்து வருஷத்தில்வீற்றிருப்போம் என்று நீங்கள் கருதத் தேவையில்லை.

 

சட்டசபையிலே எத்தனை நாளைக்கு இருப்போம் என்பதும் அந்தஆர்வம் எத்தனை காலத்திற்கு ஓடுமென்பதும் முன்கூட்டிகண்டுபிடித்துவிட முடியாதுவடநாட்டு ஏகாதிபத்தியத்தைஎதிர்த்துத் தமிழ் நாட்டிலே நடத்தப்படுகின்ற இந்தப் பெரும்அறப்போராட்டங்கள் இந்த 1967 வருவதற்குள்ளே ஏற்படுகின்றநேரத்தில் ஆர்வமுள்ள திராவிடத் தோழர்களை நான் வேண்டிக்கேட்டுக் கொள்ளுவேன் - இந்த மாமன்றத்திலேயிருந்து - இந்தமதுரையிலே இருந்து - நான் பல பகவத்சிங்குகளைஎதிர்பாக்கின்றேன் - பல திருப்பூர் குமரன்களை அழைக்கிறேன்வ. உ. சிதம்பரனார்களை விரும்பி அழைக்கிறேன்அவர்களைப்போன்றவர்கள் நம்முடைய நாட்டிலே நல்ல தியாக எண்ணம்படைத்தவர்கள் திராவிடத்திலே தோன்றினாலொழிய - அதுவும்இந்தப் பத்து ஆண்டுகளிலே கிடைத்தாலொழியஇந்தமாமன்றத்திலே நாம் எடுக்கின்ற முடிவின்படி நம்முடையதாய்த்திரு நாட்டை மீட்பதென்பது இயலாத காரியமாகிவிடும்.

 

நாம் சாமானியர்கள் - நாம் எடுத்துக்கொண்டிருக்கிற பிரச்சினைமிகப் பெரியது - அது எவ்வளவு வலிவு உள்ளவர்களாலும் அழிக்கமுடியாத பிரச்சினை - அதற்கு நல்ல தியாக உள்ளம் வேண்டும்அந்தத் தியாக உள்ளத்தை நாம் பெறவேண்டும் என்றால் மற்றஇடத்தில் உள்ள தியாகிகளை நாம் மதிக்க வேண்டும் - அந்தஇடத்திலேதான் நான் காங்கிரசிலே இருக்கின்ற உண்மையானதியாகிகளை என்றைய தினமும் மதிக்கின்றேன் என்றும்அவர்களை நான் போற்றிப் புகழ்ந்திருக்கின்றேன்.

 

தடியடிபட்ட காங்கிரஸ்காரர்களை நான் வாழ்த்திஇருக்கின்றேன்சிறைச்சாலைக்குச் சென்றவர்களை நான்போற்றி இருக்கிறேன்! - அவர்களெல்லாம் நாட்டுவிடுதலைக்காகத் தங்களுக்குத் தோன்றிய வழியிலேபாடுபட்டவர்கள்அவர்கள் விடுதலையினுடைய அத்தியாயம்முடிந்துவிட்டதென்று கருதுகின்றார்கள்.

 

ஆனால் விடுதலையினுடைய இறுதி அத்தியாயம்எழுதப்படவில்லை என்பதை அவர்கள் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள்விடுதலையினுடைய கடைசிஅத்தியாயம் திராவிட நாடு விடுதலை பெற்றால்தான் எழுதப்படமுடியும் அந்த விடுதலை அத்தியாயத்தை எழுதுவதற்குநீங்கள்தான் தகுதியானவர்கள் - அதற்காகத்தான் திமுகழகம்உங்களிடத்திலே பாடுபடுகின்றது - ஆகையாலே அந்தத் தியாகஉள்ளத்தை நீங்களெல்லாம் பெறவேண்டுமென்றுகேட்டுக்கொண்டு அதைப் பெறுவதற்கு நீங்களும் நானும் நல்லமனப்பக்குவப் பட்டுக்கொண்டு வருகிறோம்அந்தப் பக்குவம்பத்து வருஷத்திலே நல்ல பலனளிக்குமென்று கூறி - 1957-ல் சட்ட சபையை எட்டிப்பார்த்திருக்கின்ற நாம், 1967-ல் சட்டசபையிலேயோவெளியிலேயோடெல்லியிலே இருக்கின்றஅந்த நாட்களிலே அரசாளுகின்றவர்கள் அங்கே நம்மைவரவழைத்தோ அல்லது இங்கேயே அவர்கள் வந்தோ - அல்லதுநாம் அங்கே போவது இழுக்கு அல்லது அவர்கள் இங்கே வருவதுஇழுக்கு என்று கருதி இடை நடுவிலே எங்காவது ஓரிடத்திலேஅமர்ந்தோ “திராவிட நாட்டை ஏன் கேட்கிறீர்கள்?” என்றுஅவர்கள் நம்மைக் கேட்க, “இன்னின்ன காரணத்தாலேகேட்கிறோம்” என்று நாம் சொல்லஅந்தக் காரணங்களிலேஅதை ஏற்றுக் கொள்ளலாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று அவர்கள் சொல்ல - இல்லை நீங்கள் கட்டாயம்ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் வாதாட - அப்படியானால்திராவிடநாடு பிரிந்த பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்றுஅவர்கள் நம்மைக் கேட்க - பிரிந்த பிறகு இப்போதுஇருப்பதைவிட நேசம் அதிகமாக இருக்கும் என்று நாம்அவர்களுக்கு உறுதி அளிக்க - அதை நாங்கள் நம்பலாமா என்றுஅவர்கள் கேட்க - பரிபூரணமாக நம்பலாம் என்று நாம் சொல்ல - எதன்மீது ஆணையிட்டுச் சொல்லுகின்றீர்கள் என்று அவர்கள்கேட்க எங்கள் தமிழ்ப்பரம்பரையின்மீது ஆணையிட்டுச்சொல்லுகின்றோம் என்று நாம் சொல்ல - அப்படிப்பட்ட ஒருஒப்பந்தம் பேசுகின்ற ஒரு மாமன்றம் கூடுவதற்கு 1967-ல் வழிபிறக்கக் கூடுமானால் உங்களிலே பலபேர் இன்றைய தினம்உழைத்த உழைப்பு அன்றைய தினம்தான் பலன் தரும் என்று நான்கருதுகின்றேன்.

No comments:

Post a Comment