Saturday 30 January 2021

மு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா

 மு. கருணாநிதி எனும் நான் - பொன்மணி தர்மா


யிரம் சன்னல் எல்லாம் இல்லை; ஆனால் முகப்பிலேயே சூரியன் உதயமாகி வரவேற்று வீடு முழுவதும் ஆங்காங்கே கருப்பு சிவப்பு கொடி வர்ணம் சித்திரமாக படர்ந்த தமிழ் வாழும் திராவிடக்கூடு எங்கள் வீடு! 

ஆம் நாங்கள் கலைஞர் குடும்பம் தான்!...

கலைஞர் குடும்பம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இதை எழுதும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது; ஒரு திராவிடத் தீ கண்ணில்  ஊடுருவி ஆழ்மனதில் கலைஞரின் பேத்தி எனும் தமிழ் திமிரை சத்தமிட்டு உரைக்கிறது! 


இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வந்தார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்தினார். 

மு. கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும்,   சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.


பிறப்பு


திரு. கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.


ஆரம்பகால வாழ்க்கை

அவருடைய பெற்றோர்கள் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்சிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.


அரசியல் வாழ்க்கை

இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிசுவாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிசுவாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று,  அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வந்தார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள்,  தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்தார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர்  அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.

1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய  அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர்  பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சாதனைகள்

*கை ரிக்சாக்கள் ஒழிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்சாக்கள் வழங்கப்பட்டன.


*குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.


*சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.


*பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டன.


*கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டன.


*கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள்   நடத்தப்பட்டு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன.


*பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – ஆடைகள் வழங்கப்பட்டன.


*ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டன.


*போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீசு கமிசன் அமைக்கப்பட்டது.


*தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.


*அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம். (பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கபப்டும் என்று அறிவித்தார்)


*சிகப்பு நாடா முறை ரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.


*ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.

*பெண்களுக்கு சொத்துரிமை.


*மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.


*ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.


*அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.


*கலப்பு குடும்பத்துப் பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.


*சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.


*புதிய பல்கலைக் கழகங்கள் – நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.


*மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.


*மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.


*ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.


*மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு.


*மாநில திட்டக்குழு அமைத்தல்.


*ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.


*கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இவையிரண்டும் கிராமப்புறங்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற உதவின.


*உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தவர் மு.கருணாநிதி.


*சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளை உருவாக்கினார்.


*பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.


*1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, கணினித் தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


*மினி பஸ் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.


*2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.


*தேர்தல் வாக்குறுதியின்படி , குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவி வழங்கப்பட்டது.


*ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


*அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


*கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் தலா 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது.


*அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம் கொண்டு வரப்பட்டது.


*இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.


*அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.


*2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


*2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.


*தமிழகத்தில் டைடல் பார்க் இவரது ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.


*சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ரூ.14,600 கோடி மதிப்பிலான இந்த திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது.


*கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் என்று அனைத்தும் அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.


*சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டன.


*கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழங்கள் அமைக்கப்பட்டன.


*பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அமைக்கப்பட்டது.


*மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது.


*2006க்கு பின் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனீ, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.


*மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி,சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன.


*தொழிற்கல்வி பட்டபடிப்புக்காண நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது.


*அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டது.


*தமிழகத்தில் உள்ள 4,676 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன.


*ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, ஆகிய நான்கு நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.


*அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.


*தருமபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.


*369 கோடி ரூபாய் மதிப்பினாலான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்.


*மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம்.


*சேலம் உருக்காலை திட்டம்.


*கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டம்:

13-8-2007-வல்லூர் 1-ம் அலகு - 500 மெகாவாட்

2,3ம் அலகு -1000 மெகாவாட்

18-2-2008-வட சென்னை 1ம் அலகு - 600 மெகாவாட்

2ம் அலகு - 600 மெகாவாட்

25-6-2008-மேட்டூர் - 600 மெகாவாட்

28-1-2009-தூத்துக்குடி-1,2ம் அலகு - 1000 மெகாவாட்


*மின்பற்றாக்குறையைப் போக்க மொத்தம் 4300 மெகாவாட்டில் 8 மின்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.


*மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


*1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியில்தான்.


*1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது.

இவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் சாதனைகள்.


விருதுகள்

°அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.

°தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.

°தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.

°தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.


ஆளுமையின் உறக்கம்

தள்ளாடும் கைகளிலே தேனோடும் தமிழால் சொல்லோடு செயல் சேர்த்து வாழ்ந்து காட்டிய, வாழ வழி காட்டிய ஆளுமை முதன்முறையாக அமைதியாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது!


தனது தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி இவ்வாறு எழுதுவார், "வீரன் சாவதே இல்லை! கோழை வாழ்வதே இல்லை!"

ஆம் எங்கள் சகாப்தம் இன்னும் சாகவில்லை! அதன் சாதனைகள் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது!


- பொன்மணி தர்மா.


எப்போது கலைஞரைப் பார்த்தாலும், நான் வளமான, வெற்றிகரமான தமிழ்நாட்டையே அவரிடத்தில் பார்த்தேன். நான் அவரது வயதைப் பார்த்ததில்லை. அவரது எழுத்துகளைத் தனியாகப் பார்த்ததில்லை. அவர் முதலமைச்சராக இருப்பதை பிரமிப்புடன் பார்த்ததில்லை. நான், என்னுடைய உயிரோட்டமுள்ள கொள்கைகளையே அவரிடத்தில் பார்த்தேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்த்தேன். அதன் ஒட்டுமொத்த நலன்களுக்காகக் கலைஞருடன் இணைந்து நிற்கப் பல ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிகொண்டேன். இணைந்து பணியாற்றினேன்.


தலைமைக்கான தகுதிகளில், அவரை விஞ்சி எந்தத் தலைவரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர், துணிச்சலின், நம்பிக்கையின் சின்னம். அசைக்க முடியாத அவரது கொள்கைகளுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சமத்துவமான தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவது என்னும் அவரது கொள்கைக்கு எந்த ஊறும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே அவருக்கான நமது அஞ்சலியாக இருக்க முடியும்!


- பேராசிரியர் அன்பழகன்


No comments:

Post a Comment