Sunday 28 February 2021

இனி தான் ஆரம்பம் - மு.க.ஸ்டாலின் சிறப்பிதழ்

 ணக்கம்.



2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். கடந்த டிசம்பர் 2020 மாத இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "சி.என்.அண்ணாதுரை எனும் நான்" என்கிற தலைப்பில் வெளியானது. ஜனவரி 2021 இதழ், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "மு. கருணாநிதி எனும் நான்" என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வெளியானது. 


இந்த இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கை நெடியது. 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவில் தொடங்கி, மிசாவில் கைதாகி சிறையில் சித்ரவதைக்கு உள்ளாகி அரசியல் வாழ்வை தொடங்கியவர். தியாகத்தால் புடம் போட்ட தங்கமாய் ஜொலிப்பவர். அண்ணாவின் கொள்கை தீபத்தை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிவரை ஓடிச்சென்று கலைஞர், எம்ஜிஆர் அவர்களின் முன்னிலையில் ஒப்படைத்தவர். தி.மு.கவில் இளைஞர் அணி எனும் பேரணியை தொடங்கிவைத்து இயக்கத்துக்கு இளைஞர் பால் கொண்ட நாட்டத்தை வெளிக்காட்டியவர். 1984 ல் இருந்து சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுபவர். 1996 ல் சென்னை மேயராக மக்களால் மிகப்பெரிய வெற்றியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டியவர். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ வாக, உள்ளாட்சி துறை, ஊராகவளர்ச்சி துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் கீழான நிலைக்கு காரணமான ஆளும் கட்சியை ஆளும் எதிர்க்கட்சி தலைவராக வலம் வருபவர். 2016 ல் நூலளவில் ஆட்சியை இழந்த தளபதி மு.க.ஸ்டாலின் 2019 ல் பாசிசத்திற்கு எதிரான யுத்தத்தில் மதவாதத்தை அண்ட விடாமல் ஓட ஓட விரட்டி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை பெற்றவர். 


இதோ 2021 தேர்தல் வந்துவிட்டது. தமிழ்நாட்டு இருளை அகற்ற வரும் உதயசூரியனாய் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறார், ஓய்வறியா சூரியன் கலைஞரே "உழைப்பு உழைப்பு உழைப்பு" என்று பாராட்டிய மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டிற்கான விடிவு பிறக்கட்டும். இனி தான் ஆரம்பம்!     


இதழை வாசிக்க: இனி தான் ஆரம்பம் - மு.க.ஸ்டாலின் சிறப்பிதழ் 


இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கு எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 


இந்த சிறப்பிதழ் உங்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்களையும், வரலாற்று அறிவையும் தரும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!  


உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com


கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/

 


இப்படிக்கு,

திராவிட வாசிப்பு Editorial Team:

(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மதுமலர்,மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, டிமோத்தி, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)

No comments:

Post a Comment