மு.க ஸ்டாலின் வாழ்க்கை குறிப்புகள்
01.03.1953
கலைஞர் மு.கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியருக்கு மகனாக மு.க.ஸ்டாலின் பிறந்தார்.
1967
கோபாலபுரம் “இளைஞர் திமுக” 14 வயதில் மு.க. ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டது.
30.09.1968
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்.
08.04.1972
காஞ்சி மாநாட்டில், அண்ணா நினைவு இலட்சிய தீபத்தை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிக்கு ஓட்டமாக மு.க. ஸ்டாலின் வந்து நாவலர்,எம்ஜிஆர், கலைஞர் கையில் ஒப்படைப்பு.
1972
கோவை மாணவர் அணி, மொழி காக்கும் மாநாட்டில், மொழிக்காக உயிரை விடவும் தயார் என மு.க. ஸ்டாலின் சூழுரை நிகழ்த்தினார்.
25.06.1975
இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற நெருக்கடி நிலை (Misa/ Maintainence
Internal Security Act) அமல் படுத்தப்படுகிறது.
27.06.1975 - நெருக்கடி நிலையை எதிர்த்து திமுக தீர்மானம்
04.07.1975 - முதல்வர் கலைஞர், நாவலர் காமராசரை நெருக்கடி நிலை தொடர்பாக
சந்தித்தல்.
31.01.1976 - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. மு.க. ஸ்டாலினை
கைது செய்ய போலீஸ் கோபாலபுரம் வருகை. அவர் வீட்டில் இல்லை.
நாளை தான் வருவார். வந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் என கலைஞர்
சொல்கிறார். வீட்டை சோதனையிட்டு விட்டு போலீஸ் செல்கின்றனர்.
01.01.1976 - மு.க. ஸ்டாலின் கைது. எண்ணெற்ற கழகத்தினர் தமிழகம் முழுவதும் கைது
செய்யப்பட்டனர்.
03.02.1976 - அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்
என மிசாவில் கைதானவர்கள் பெயர்கள் மாவட்ட வாரியாக
முரசொலியில் வெளியீடு.
02.06.1976 - எழுத்துரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து கலைஞர் அண்ணா சாலையில்
துண்டுப் பிரசுரங்களுடன் அறப்போர்.
05.01.1977 - மிசா கொடுமையில், சிறையில் தாக்கப்பட்ட கழகத்தின் கொள்கை பரப்பு
செயலாளர் தளபதி ஸ்டாலின் உயிர்காத்த சிட்டிபாபு மரணம்.
20.07.1980 - திமுக இளைஞரணி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.
01.08.1982 - மு.க.ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் பொறுப்புக்கு நியமிக்க
அனைத்து மாவட்ட முன்னோடிகள் பரிந்துரை செய்தனர்.
1983 - இளைஞரணி செயலாளர் ஆனார் ஸ்டாலின். கட்சிக்காக 10 லட்ச ரூபாய்
நிதி திரட்டி எந்த அணி தருகிறதோ, அந்த அணிக்கு அன்பகம் கட்டடத்தைத்
தருவதாக கலைஞர் தெரிவித்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும்
சென்று நிதி வசூலித்த மு.க.
ஸ்டாலின், ஒட்டுமொத்தமாக 11 லட்ச ரூபாய் திரட்டி கட்சிக்கு அளித்தார்.
இதையடுத்து அன்பகம் தி.மு.க. இளைஞரணிக்கு வழங்கப்பட்டது.
1984 - முதல் சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி
1989 - சட்டமன்ற உறுப்பினராக முதன் முதலாக ஆயிரம் விளக்கு
தொகுதியிலிருந்து தேர்வு
12.10.1996 -8 லட்சம் வாக்குகள் பெற்று சென்னை மாநாகர மேயராக மு.க. ஸ்டாலின்
வெற்றி பெற்றார்.
28.07.1997-
30.07.1997 - ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகமான நியூயார்க் நகரில், உலக
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மேயர்கள் மாநாட்டில் சென்னை
மேயரான மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
04.08.1997
09.08.1997 - ஜப்பானில் உறிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நடைபெற்ற
"ஒற்றுமையின் மூலம் அமைதிக்கான உலக அளவிலான மேயர்கள்
மாநாட்டில், சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
06.05.2002 - பிரேசில் ரியோடி ஜெனீரோவில் உள்ளாட்சி மன்ற அதிகாரங்கள் குறித்த
கருத்தரங்கில் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
12.01.2003 - ஜெயலலிதாவால் அகற்றப்பட்ட கண்ணகி சிலைக்கு மாற்றாக
அன்பகத்தில் கண்ணகி சிலை நிறுவப்பட்டது.
11.04.2003 - ராணி மேரி கல்லூரியை புதிய சட்டசபைக்காக இடிக்கக்கூடாது என்று
அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்தித்து தனது ஆதரவை
தெரிவித்த மு.க.ஸ்டாலின் அவர்களை நள்ளிரவில் ஜெயலலிதா அரசு கைது
செய்தது.
02.06.2003 - திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஆனார்
மு.க.ஸ்டாலின்
30.09.2003 - திராவிட இயக்க வரலாற்று நிரந்தர கண்காட்சி கலைஞர் கருவூலத்தில்
தளபதி ஸ்டாலினின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
2003 - "ஐரிஷ்" பன்னாட்டுப் பல்கலைக்கழகம் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்
கொடுத்தது.
13.05.2006 - உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின்
பொறுப்பேற்றார்.
2008 - திமுகவின் பொருளாளர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
06.02.2008 - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் பயணம்.
29.05.2009 - தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின்
பதவியேற்றார்.
01.08.2009 - சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தளபதி ஸ்டாலினுக்கு டாக்டர்
பட்டம் வழங்கியது
25.11.2009 - துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்.
25.02.2012 - கென்டக்கி மாகாண “கென்டகி கலோனல்” விருது மு.க.ஸ்டாலினுக்கு
வழங்கப்பட்டது
25.05.2016 - சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்பு
01.04.2017 - திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் செயல்
தலைவராக ஆக்கப்பட்டார்.
07.08.2018 - கலைஞர் கருணாநிதி மறைவு
28.08.2018 - திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு
23.05.2019 - நாடாளுமன்றத்தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை பெற்று திராவிட
முன்னேற்றக் கழக கூட்டணி மிகப்பெரிய வெற்றி.
தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ
No comments:
Post a Comment