Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி - யதுமுனி

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி - யதுமுனி


ணக்கம், இந்த கட்டுரை எழுதும் நான் எழுத்து உலகில் பிரதிலிபி இனையதளம் மூலமாக குடும்ப நாவல்களை எழுதி வருபவன், மற்றபடி என் இயல்பு திராவிடம் சார்ந்து இருந்தாலும் சில விடயங்களில் முரண்பட்டவனாகவும் இருந்துள்ளேன். ஆம், நான் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் அல்ல. இராமானுசர் வகுத்த  இறை நெறியான வைணவத்தை தீவிரமாக பின்பற்றுபவன். ஆனாலும், என்னுடைய  முப்பத்தி இரண்டாம் அகவையில் நடக்க உள்ள இந்த தேர்தலிலும் சரி மற்றும் இதற்கு முன்னர் நடந்த அனைத்து  தேர்தல்களிலும் சரி, நான் உதயசூரியன் அல்லது திமு கழகத்தின் தோழமை கட்சிகளின் சின்னங்களில் மாத்திரமே என் வாக்கினை செலுத்தி உள்ளேன். அதற்கான காரணத்தை விளக்குவதே  இந்த கட்டுரையின் சாராம்சம்.

  

நான் பிராமணர் அல்லாத முன்னேறிய வகுப்பினை சார்ந்தேன். எனக்கும் ஒரு காலத்தில் 90% மதிப்பென் இருந்தும் ஒரு மூன்றாம் தர பொறியியல் கல்லூரியில் எனக்கு கிடைத்த கல்வி, தாழ்த்தபட்ட என் நண்பனுக்கு 60% மதிப்பென்னில் நல்ல கல்லூரியில் கிடைத்தபோது  இந்த இட ஒதுக்கீட்டை  கண் மூடித்தனமாக எதிர்த்தவன்.

  

ஆனால் அதே நண்பனை அவன் உயர்கல்வி முடித்து அரசு பணியில் சேர்ந்த பின்னர் தான் என் உறவினர்கள் குறைந்தபட்சம் மனிதனாக மதித்தனர் என்பதை உணர்ந்தபின்னர் பொருளாதார இட ஒதுக்கீட்டை  எதிர்த்த சில முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். இன்று இட ஓதுக்கீட்டிற்கு நாகபுரி கும்பலால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நீக்க நம் மாநிலத்தில் நாகபுரி அரசியலுக்கு எதிராக குரல் தரும் திமு கழக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.

  

அரசியல் என்பது வெறும் அரசியல்வாதிகள் செய்யும் பணி அல்ல, அதில் சமூகம் எப்போதும் உள்ளடங்கியே இருக்கும். ஒரு சமூகம் என்பது ஒரே கருத்தியலால் ஆனதாக எப்போதும்  இருக்க முடியாது. ஆனால் ஒரே கருத்தியல் என்ற கருத்தாக்கத்தை திணிக்க முயலும்  அமித்ஷா மோடி ஆகிய சாக்கடைகளை துடைத்தெறிய திமு கழக ஆட்சி மீண்டும் வேண்டும்.  


இராமானுசர் வளர்த்தெடுத்த வைணவமும், அப்பர் பெருமான் போன்றோர் வளர்த்தெடுத்த சைவமும் மண் சார்ந்த மதங்களாகவும், கருப்பனும், முனீசுவரனும் மண் சார்ந்த தெய்வங்களாக  இருக்க, நம் அனைவரையும் இந்துக்கள் என்று ஏமாற்ற முயலும் காஞ்சி சங்கர மடம், ஜக்கி போன்ற போலித்துவதிடமிருந்து  காப்பாற்ற திமு கழக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.

  

அய்யன் வள்ளுவனுக்கு பூனூல் மாட்டிய சதிகாரர்கள் வாக்குக்காக தந்தை பெரியாருக்கும் அதை செய்யும் துணிவு பெருவதை தடுக்க மீண்டும் வேண்டும் திமு கழக ஆட்சி. 


திராவிடத்தை பெயரில் மாத்திரம் வைத்து ஏமாற்றும் அதிமுக, பேசி  ஏமாற்றும் மநீம போன்ற போலிகளிடமிருந்து திராவிடத்தை  மீட்டெடுக்க மீண்டும் வேண்டும் திமு கழக ஆட்சி.

  

இறுதியாக, மூச்சு விடுவதற்கு கூட டெல்லி மேலிடத்திடம் அனுமதி கேட்கும் அடிமை கூட்டத்தையும்,மாநில சுயாட்சிக்கு சவாலாக உள்ள சூரப்பா போன்றோரையும், பெண்கள் பாதுகாப்பிற்கு சவாலாக  இருக்கும் ராஜேஷ் தாஸ் , பொள்ளாச்சி ஜெயராமன் போன்றோரையும் தூக்கி எறிய மீண்டும் வேண்டும் திமு கழக ஆட்சி. 

 

நன்றி 

அன்புடன் 

யதுமுனி







No comments:

Post a Comment