Friday 2 July 2021

ஓட்டுக்கு பணம் - கவிஞர்.சொ.கார்த்திக்

 ஓட்டுக்கு பணம் - கவிஞர்.சொ.கார்த்திக் 



தேர்தல் என்னும் பேரில்

நாடி வருகிறார்கள் ஊரில்

கட்சிப் பணங்கள் காரில்

வருகிறது வீட்டைத்தேடி நேரில்

பாமர மக்களை அரவணைக்கும்படி

கம்பத்தின் உச்சியிலே கயவர்கள் கொடி

உன்மை எதுவென உணராதபடி 

ஓட்டுக்கு பணம் இதோ

கையிலே பிடி

அரசியலில் அவரவர் ஆதாயம் தேடி

மக்களிடம் வருகிறார்கள்

லஞ்சப்பணத்தை கிள்ளி எரிய நாடி

ஏழைகளுக்கு கடன் கொடுக்கா ஆட்சியை

பெருமிதம் கொண்டு நிறுத்துவர் பேனர்களில் 

புகைப்படக் காட்சியை 

கஞ்சிக்கு வழியில்லா கைக்கூலி வீட்டிற்கு 

ஓட்டுக்கு பணம் கொடுக்க

வருகிறார்களே நடு ரோட்டிற்கு

நல்லது கெட்டது அறியாதவனும் 

நாட்டைக் கெடுக்க விலைபோகின்றான் 

மக்களை காத்த ஜனநாயக ஆட்சிகளும்

பணநாயக ஆட்சியாய் மாரியதே

இது என்னங்கடா நாடு

நாட்டு மக்களுக்கு வந்தக் கேடு.

                                               -(கவிஞர்.சொ.கார்த்திக் போளையம்பள்ளி)

No comments:

Post a Comment