வளர்ந்து வரும் சாதியவாதத்தை மதவாதத்தை எப்படி தடுப்பது ? - நித்தியானந்தம்
ஒடுக்கபட்டோருக்கு கல்வியின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . எவ்வளவு தொந்தரவுகள் இடையூறுகள் ஒவ்வொரு நொடியும் வந்தாலும் கல்வியை இடைநிறுத்தாமல் தேர்ச்சியடைந்து கல்வியை முடிக்க வேண்டும் . ஒடுக்கபட்டோர் குறைந்தது பட்டபடிப்பை முடிக்க வேண்டும் . நல்லதொரு பணியில் பெரும்பாண்மையானோர் அமர வேண்டும் .
தங்கள் ஜாதி தாழ்த்தபட்ட ஜாதியாக இருக்கும் என்றால் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு ஜாதியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சிறுவயதிலேயே . இது பல இன்னல்கள் மனசிதைவுகளிலிருந்து பாதுகாக்க எதிர்த்து நிற்க புரிந்து கொள்ள உதவும் . ஜாதி வெறி பிடித்தவர்கள் நடமாடும் உலகத்தை பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் . ஜாதியால் பாகுபாடு காட்டும் நபர்கள் எவராக வேண்டும் என்றாலும் புனித தொழில் செய்பவராகவும் இருக்கலாம் . இவை இரண்டும் ஜாதிய தீண்டாமையை எதிர்த்து நிற்க உதவும் .
திராவிடர்கள் அனைவரும் ஷீத்திரர்களும் பஞ்சமர்களும் மட்டுமே யாரும் இங்கு ஷத்திரிய வைஷியர் கிடையாது என்பதை தொடர்ந்து விடாமல் நிறுத்தாமல் புரிய வைத்து கொண்டே இருக்க வேண்டும் .
மன்னன் ஜாதியற்றவன் . மன்னன் வேறு மன்னன் குடும்பத்தில் மட்டுமே திருமணம் செய்வார் வேறு ஜாதியாக இருந்தாலும் . சொந்த ஜாதி என சாதரண குடும்பத்தில் திருமணம் செய்ய மாட்டார் . ஆண்டை ஜாதி ஒன்று இல்லவே இல்லை என்பதை உணர வைக்க வேண்டும் . ஆண்ட குடும்பம் வேண்டும் என்றால் இருக்கலாம் தவிர ஆண்ட ஜாதியிருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் விடாமல் .
சிறுபான்மையினர் நிறுவனங்களில் சிறுபான்மையினர் மிகுதியாக இருப்பது , சேர்வது , கற்பது , வருவது இயல்பு . அங்கு சிறுபான்மையினர் யாரையும் ஒடுக்குவதோ , பாகுபாட்டுடன் நடத்துவதோ , பாரபட்சத்துடன் நடந்து கொள்வதோ ,தேவையற்ற ஆதிக்கம் செலுத்துவதோ வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதோ முற்றிலும் நடைபெறாமல் கவனமாக இருக்க வேண்டும் . நடைபெறும் தவறுகளில் பெரியளவில் மதகசப்புணர்வை ஏற்படுத்தும் . அதை தவிர்க்க வேண்டும் .
நாட்டார் தெய்வழிபாடுகளும் குல தெய்வபாடுகளுமே நம் வழிபாடு., ஆரிய கடவுள்கள் நம் கடவுள்கள் அல்ல . ஏன் ஆரியர்கள் நம் நாட்டார் கடவுள்களை வணங்குவதில்லை என்ற கேள்வியை விடாமல் எழுப்ப வேண்டும் .
இங்கு பிழைப்பிற்காக வரும் பிற மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வை விடாமல் ஏற்படுத்த வேண்டும் . உங்கள் அறியாமையால் இந்த மாநிலத்தையும் அழித்தால் உங்களுக்கு பிழைப்பிற்கு வாழ்வதற்கு வேறு இடமே இல்லை . உங்கள் சந்ததியினராவது சுயமரியாதையோட வாழ பகுத்தறிவுடன் நடந்து கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .
பூர்வகுடி மக்கள் மாநகரங்களில் இருந்து அப்புறபடுத்து அவ்விடங்களை ஆரிய வியாபார ஜாதிகள் அபகரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் . அவர்களை பொறுத்த வரை அவர்கள் உயர்ஜாதி் . அவர்கள் இறங்கி வரவேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய சனதானத்தை விட வேண்டிய எந்த ஒரு தேவையும் கட்டாயுமும் இல்லை . அவர்கள் மதத்தை தான் கண்டிப்பாக பரப்ப வாய்ப்பு அதிகம். அவர்களை கட்டுபடுத்தினால் மதவாதத்தை கட்டுபடுத்தலாம் .
பெரும்பான்மையினர் நடத்தும் மத ஊர்வலங்களில் , ஜாதி்ஊர்வலங்களில் கலவரங்கள் நடைபெறாமல் இருக்க அதற்கு அனுமதி வாங்கும் தலைவர்கள பொறுப்பேற்க வேண்டும் . அசம்பாவிதம் நடந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் . பொது சொத்துகள் சேதமடையாமல் இருக்க வைப்பு தொகை கட்ட சொல்ல வேண்டும் . அனுமதி வாங்கும் தலைவர்கள் அந்த இடத்தில் முடியும் வரை இருக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பை அவர்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என சட்டம் வர வேண்டும் .
நித்தியானந்தம்
No comments:
Post a Comment