Friday 2 July 2021

வளர்ந்து வரும் சாதியவாதத்தை மதவாதத்தை எப்படி தடுப்பது ? - நித்தியானந்தம்

 வளர்ந்து வரும் சாதியவாதத்தை மதவாதத்தை எப்படி தடுப்பது ? -  நித்தியானந்தம்

ஒடுக்கபட்டோருக்கு கல்வியின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . எவ்வளவு தொந்தரவுகள் இடையூறுகள் ஒவ்வொரு நொடியும் வந்தாலும் கல்வியை இடைநிறுத்தாமல் தேர்ச்சியடைந்து  கல்வியை முடிக்க வேண்டும் .  ஒடுக்கபட்டோர் குறைந்தது பட்டபடிப்பை முடிக்க வேண்டும் .  நல்லதொரு பணியில் பெரும்பாண்மையானோர் அமர வேண்டும் .   


தங்கள் ஜாதி தாழ்த்தபட்ட  ஜாதியாக இருக்கும் என்றால் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு ஜாதியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சிறுவயதிலேயே . இது பல இன்னல்கள் மனசிதைவுகளிலிருந்து பாதுகாக்க எதிர்த்து நிற்க புரிந்து கொள்ள உதவும் .  ஜாதி வெறி பிடித்தவர்கள் நடமாடும் உலகத்தை பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் . ஜாதியால் பாகுபாடு காட்டும் நபர்கள்  எவராக வேண்டும் என்றாலும் புனித தொழில் செய்பவராகவும் இருக்கலாம் . இவை இரண்டும் ஜாதிய தீண்டாமையை எதிர்த்து நிற்க உதவும் . 


திராவிடர்கள் அனைவரும் ஷீத்திரர்களும் பஞ்சமர்களும் மட்டுமே யாரும் இங்கு ஷத்திரிய வைஷியர் கிடையாது  என்பதை தொடர்ந்து விடாமல் நிறுத்தாமல் புரிய வைத்து கொண்டே இருக்க வேண்டும் . 


மன்னன் ஜாதியற்றவன் . மன்னன் வேறு மன்னன் குடும்பத்தில் மட்டுமே திருமணம் செய்வார் வேறு ஜாதியாக இருந்தாலும் . சொந்த ஜாதி என சாதரண குடும்பத்தில் திருமணம் செய்ய மாட்டார்  . ஆண்டை ஜாதி ஒன்று  இல்லவே இல்லை என்பதை உணர வைக்க வேண்டும் .  ஆண்ட குடும்பம் வேண்டும் என்றால் இருக்கலாம் தவிர ஆண்ட ஜாதியிருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் விடாமல் .  


சிறுபான்மையினர் நிறுவனங்களில் சிறுபான்மையினர் மிகுதியாக இருப்பது , சேர்வது  , கற்பது , வருவது இயல்பு . அங்கு சிறுபான்மையினர் யாரையும் ஒடுக்குவதோ , பாகுபாட்டுடன் நடத்துவதோ  , பாரபட்சத்துடன் நடந்து கொள்வதோ ,தேவையற்ற ஆதிக்கம் செலுத்துவதோ வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதோ முற்றிலும் நடைபெறாமல்  கவனமாக இருக்க வேண்டும் . நடைபெறும் தவறுகளில் பெரியளவில் மதகசப்புணர்வை ஏற்படுத்தும் .  அதை தவிர்க்க வேண்டும் . 


நாட்டார் தெய்வழிபாடுகளும் குல தெய்வபாடுகளுமே  நம் வழிபாடு., ஆரிய கடவுள்கள் நம் கடவுள்கள் அல்ல . ஏன் ஆரியர்கள் நம் நாட்டார் கடவுள்களை வணங்குவதில்லை என்ற  கேள்வியை விடாமல் எழுப்ப வேண்டும் .   


இங்கு பிழைப்பிற்காக வரும் பிற மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வை விடாமல் ஏற்படுத்த வேண்டும் . உங்கள் அறியாமையால்  இந்த மாநிலத்தையும் அழித்தால் உங்களுக்கு பிழைப்பிற்கு வாழ்வதற்கு வேறு இடமே இல்லை .  உங்கள் சந்ததியினராவது சுயமரியாதையோட வாழ  பகுத்தறிவுடன் நடந்து கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . 


பூர்வகுடி மக்கள் மாநகரங்களில் இருந்து அப்புறபடுத்து அவ்விடங்களை ஆரிய வியாபார ஜாதிகள்  அபகரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் . அவர்களை பொறுத்த வரை அவர்கள் உயர்ஜாதி் . அவர்கள் இறங்கி வரவேண்டிய  புரிந்து கொள்ள வேண்டிய சனதானத்தை விட வேண்டிய எந்த ஒரு தேவையும் கட்டாயுமும் இல்லை . அவர்கள்  மதத்தை தான் கண்டிப்பாக பரப்ப வாய்ப்பு அதிகம். அவர்களை கட்டுபடுத்தினால்  மதவாதத்தை கட்டுபடுத்தலாம் .   


பெரும்பான்மையினர் நடத்தும் மத ஊர்வலங்களில் , ஜாதி்ஊர்வலங்களில் கலவரங்கள் நடைபெறாமல் இருக்க அதற்கு அனுமதி வாங்கும் தலைவர்கள  பொறுப்பேற்க வேண்டும் . அசம்பாவிதம் நடந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் .  பொது சொத்துகள் சேதமடையாமல் இருக்க வைப்பு தொகை கட்ட சொல்ல வேண்டும் .  அனுமதி வாங்கும் தலைவர்கள் அந்த இடத்தில் முடியும் வரை இருக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பை அவர்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என சட்டம்  வர வேண்டும் . 

நித்தியானந்தம்

No comments:

Post a Comment