அண்ணா வழியில் அயராது உழைப்போம் - இராம. வைரமுத்து
தனயன் நினைவைப் போற்ற
தாய்க் கழகம் எடுக்கும் விழா
கலைஞர் தந்த முழக்கங்களை
கவிதைகளில் அடுக்கும் விழா !
புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்களுக்கும்
கவிஞர் பெருமக்களுக்கும்
இணையத்தில் இணைந்துள்ள
அனைவருக்கும் என் வணக்கம் !
அண்ணா மறைந்து
ஆண்டு ஒன்று ஆன போது
திருச்சி மாவட்ட
தி.மு.க மாநாட்டில்
தலைவர் கலைஞர் தந்த
ஐம்பெரும் முழக்கம்
காலம் உள்ள வரை நிலைக்கும் !
அண்ணா வழியில்
அயராது உழைப்போம்
அதில் முதல் முழக்கம்
அதுவே என்றும் நம் வழக்கம் !
நாடாளுமன்றத்தில் அண்ணா சொன்னார் அன்று
நாடே சொல்கிறது இன்று
நாங்கள் திராவிடக் கூட்டம் என்று !
அண்ணன் தாய்க்கு பெயர் சூட்டினார்
தம்பி செம்மொழி எனும் அணி பூட்டினார் !
அண்ணா மக்களிடம் செல் என்றார்
அதைச் செய்தே தளபதி வென்றார்
பார்ப்பனர் இல்லாத அமைச்சரவை
அண்ணா காலத்தில்
பார்ப்பனர் இல்லாத சட்டமன்றம்
தளபதி காலத்தில் !
வசதி படைத்தோரிடம்
வரியினை பெறுவோம்
வறியோர் வாழ்ந்திட
நலத்திட்டங்கள் தருவோம்
அண்ணா சொன்னார் அன்று
அதுவே வெள்ளை அறிக்கையில் இன்று !
அண்ணா வழி செல்வோம்
ஆரியப் பகை வெல்வோம் !!
- இராம. வைரமுத்து
கழக வழக்கறிஞர்
மதுரை
No comments:
Post a Comment