Tuesday 31 August 2021

அண்ணா வழியில் அயராது உழைப்போம் - இராம. வைரமுத்து

 அண்ணா வழியில் அயராது உழைப்போம் - இராம. வைரமுத்து



னயன் நினைவைப் போற்ற

தாய்க் கழகம் எடுக்கும் விழா

கலைஞர் தந்த முழக்கங்களை

கவிதைகளில் அடுக்கும் விழா !


புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்களுக்கும்

கவிஞர் பெருமக்களுக்கும்

இணையத்தில் இணைந்துள்ள 

அனைவருக்கும் என் வணக்கம் !


அண்ணா மறைந்து

ஆண்டு ஒன்று ஆன போது

திருச்சி மாவட்ட

தி.மு.க மாநாட்டில்

தலைவர் கலைஞர் தந்த

ஐம்பெரும் முழக்கம்

காலம் உள்ள வரை நிலைக்கும் !


அண்ணா வழியில்

அயராது உழைப்போம்

அதில் முதல் முழக்கம்

அதுவே என்றும் நம் வழக்கம் !


நாடாளுமன்றத்தில் அண்ணா சொன்னார் அன்று

நாடே சொல்கிறது இன்று

நாங்கள் திராவிடக் கூட்டம் என்று !


அண்ணன் தாய்க்கு பெயர் சூட்டினார் 

தம்பி செம்மொழி எனும் அணி பூட்டினார் !


அண்ணா மக்களிடம் செல் என்றார்

அதைச் செய்தே தளபதி வென்றார்

பார்ப்பனர் இல்லாத அமைச்சரவை

அண்ணா காலத்தில்

பார்ப்பனர் இல்லாத சட்டமன்றம்

தளபதி காலத்தில் !


வசதி படைத்தோரிடம்

வரியினை பெறுவோம்

வறியோர் வாழ்ந்திட

நலத்திட்டங்கள் தருவோம்

அண்ணா சொன்னார் அன்று

அதுவே வெள்ளை அறிக்கையில் இன்று !


அண்ணா வழி செல்வோம்

ஆரியப் பகை வெல்வோம் !!


- இராம. வைரமுத்து

கழக வழக்கறிஞர்

மதுரை


No comments:

Post a Comment