Sunday 31 October 2021

உலகின் நீள அகலத்தை அறிய வைத்த திராவிட நாடு.. - வீ.வைகை சுரேஷ்

 உலகின் நீள அகலத்தை அறிய வைத்த திராவிட நாடு.. - வீ.வைகை சுரேஷ்


மிழ்நாடு,  கொங்குநாடு, அகன்ற பாரதம்,  Clerical Error என்ற விவாதங்கள் எல்லாம ஓய்ந்து விட்டது.  அன்று பேரறஞர் அண்ணா அவர்கள் 'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடு காடு,  என்ற  தனிநாடு கோரிக்கையினை மட்டும் கை விட்டு விட்டோம், ஆனால்  இதர கோரிக்கைகள் இன்னும் கைவிடப்பட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 


இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த விஜய்காந்த்,  அர்ஜுன வேண்டுமானால் பாக்கிஸ்தான் எதிரி என படம போட்டு காட்டுவார்கள்.  இன்று ஆளும் பாஜக அரசும்,  மோடியும் இந்தியாவின் அனைத்த பிரச்சனைகளுக்கும் பாக்கிஸ்த்தானே காரணமென தினமும் பாடம் எடுத்துக் கொண்டு உள்ளார்கள் . 

அன்று சீனா இந்தியா மீது படையெடுக்க அதன் அடிபடையாக  திரைப்படங்கள் எல்லாம் வந்தது.


. 1962 அக்டோபரில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைந்த அண்ணா, இந்திய- சீனப் போரினைக் கருத்தில்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் .

இப்போது நாம் நாம் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம் 


அது விமானம்,  தொடர்வண்டி, மகிழுந்து, பேருந்து என எதுவுமே கண்டுபிடிக்க படாத காலம். குதிரைகள் மூலமாக தரை வழி பயணம், கப்பல்கள் மூலமாக கடல் வழி பயணமென உலகம் இருந்த காலம் .

கொலம்பஸ் இந்தியவை தேடி அமெரிக்கவை கண்டது என வரலாறு படித்திருக்கிறோம். இந்தியாவில் திராவிட நாடு என்ற ஒன்றினை தேடி புறப்பட்ட போதே இருந்த உலகின் நீளம்-அகலம் தூரம் எல்லாம் தெளிவாக தெரிய வந்தது என்பதை இங்கே காண்போம்.  


பண்டைய காலத்தில் பணமே இல்லாத காலத்தில் பண்டமாற்று முறை இருந்த காலத்தில், அட நம்ம பாரதி கூட  பாடி இருப்பாரே "கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்" என , அப்படித்தான் பண்ட மாற்று முறை இருந்த காலமது.  

மேற்கத்திய நாடுகள் கடுமையான குளிர் பிரதேசமாக இருந்த காலம் அது. ஆறு மாதம் வெய்யில் ஆறுமாத குளிரென பனி போர்த்தி கிடக்க வெளியே எவரும் வர முடியாத,  மர வீடுகளுக்குள் இருக்கும் மக்கள்,  மிகப்பெரிய மரப்பெட்டிகளில் குதிரை,  மாடு, ஆடு போன்றவற்றை வெட்டி பனி கட்டிகளுக்குள் பத்திரமாக வைத்திருக்க, சிறிது சிறிதாக வெட்டி எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள்.  அந்த மாமிசங்களை பத்திரமாக வைக்க, சமைக்க,  மிளகு,  சீரகம்,  பட்டை, கிராம்பு, லவங்கம் போன்றவை வெகுவாக பயன்படுத்திய காலம் அது.  


அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ். அதற்கு முன்பாக இந்தியாவில் கார சுவையாக மிளகையே பயன்படுத்தி வந்த காலம் அது. மேற்கத்திய நாட்டு மக்கள் மாமிசம சமைக்க மட்டுமல்ல, மாமிசத்தை கெட்டுப்போகாமல்  இயற்கை preservative பாதுகாப்பு பொருளாக பயன்படுத்தி வந்த காலம் அது. ஆப்கானி்ஸதான் காபூல் நகர சந்தையில் சந்தித்து பண்டமாற்று முறையில் வாங்கி கொடுக்கும் பழக்கம் இருந்து  வந்தது.


மிளகு,  சீரகம், லவங்கம்,  பட்டை கிராம்பு, ஏலக்காய் போன்ற இயற்கையான பாதுகாப்பு பொருட்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் திராவிட நாட்டில் மிகுதியாக கிடைத்தது. பாரதி பாடியது போல் வெற்றிலை கூட திராவிட நாட்டில் இருந்துதான் சென்றது.  பாக்கிஸ்தான், ஈரான், ஈராக் கடந்து ஆப்கானி்ஸதான் காபூல் நகரில் வைத்து மேற்கத்திய நாட்டினர்  இத்தகைய   இயற்கை பாதுகாப்பு பொருட்கள் மட்டுமின்றி முத்து,  பவளம் போன்ற பொருட்களை  வாங்கி கொள்ள,  மேற்கத்திய நாடுகளில் இருந்து கண்ணாடிகள், மது போத்தல்கள்,  குதிரைகள்  போன்றவற்றை பண்ட மாற்றாக வாங்கி வருவார்கள்.  


பண்டைய சங்க இலக்கியத்தில் அகம்,  புறம் என திணைகளை வகுத்தவர்கள் குறிஞ்சி,முல்லை, மருதம்,  நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்தவர்கள் பாலை நிலத்தில் வாழ்பவர்களின் தொழிலாக வழிப்பறி செய்தல், சூறையாடல் என வகுத்துள்ளது வரலாறு.  காபூல் செல்லும் வழி பாலைவனமாக இருந்தமையால் நிறைய வழிப்பறிகள் மூலமாக நிறைய இழப்புகள் ஏற்பட்டது. இதன் பொருட்டு மேற்கத்திய நாடுகள் நாம் ஏன் இந்த பாலைவனமாக உள்ள பாதையினை நம்பி இருக்க வேண்டிய நிலை.  நாமே நேரடியாக திராவிட நாட்டிற்கு கடல் வழியாக பாதையை கண்டறிந்தால் இத்தகைய இழப்புகளை தவிர்க்கலாம் என யோசித்து அதற்கான முயற்சிகளில் முழுமூச்சுடன் இறங்கினார்கள். 


இயக்குநரும், ஒளி பதிவாளருமான சந்தோஷ் சிவன அவர்களுடைய உருமி என்ற திரைப்படம கூட மிளகு வாங்க கோழிக்கோட்டில் வந்து இறங்கிய வாஸ்கோடகாமா பற்றிய கதைதான். பிரபுதேவா,  பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள்.  இந்த இடத்தில் ஒரு பெட்டி இல்லாமல் குட்டி செய்தி.  

ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்திரபிரஸ்தம் என அழைக்கப்பட்ட டெல்லி  வரை வந்து இருந்தனர்.  பாபருடைய காலத்திற்கு பிறகு அவருடைய மகன் ஹுமாயுன் ஒப்புக்கு சப்பாணியாக இருக்க,  ஹுமாயுன் சகோதரர்கள் ஆளுக்கொருபுரமாக  ஆவர்த்தனம் செய்ய,  ஹுமாயுன் தனது  கர்ப்பினி மனைவியுடன் கிளம்பினார் இந்தியாவை விட்டு. கர்ப்பிணியாக  இருந்த மனைவியுடன் பாக்கிஸ்த்தான் அமரக்கோட்டையில் இருந்தாராம். கர்ப்பிணியாக இருந்த ஹுமாயுன் மனைவி  தனக்கு மாதுளம் பழம் வேண்டுமென கேட்க,  அந்த பாலைவன பகுதியாக ஒட்டகத்தில் சென்ற வியாபாரியை வழிமறித்து அவருடைய பெட்டிகளை பறிக்க,  பெட்டிகள் முழுக்க மாதுளம் பழங்கள் இருந்ததாம்.  மாதுளம் பழங்களை மனைவியிடம் கொண்டு வந்த ஹுமாயுன் 'உனது வயிற்றுக்குள் இருப்பது யார்,  இந்த பாலை வனத்தில் கூட  நீ கேட்ட மாதுளம் பழங்கள் கிடைக்கிறதே ' என சிரித்தாராம்.  வயிற்றுக்குள் இருந்தவர்தான் தீன்இலாஹி என தேடிய அக்பர்.  மகேஷ்பாபு என்ற இயற்பெயர் கொண்ட மகேஷ்பாப அக்பருடன் கொண்ட நட்பால் பின்னாளில் பீர்பால் என மாற்றியதும், பீர்பாலின் மகளை அக்பரே மணம் முடிக்க விரும்பிய கதை ஜோதா அக்பர் என திரைப்படமானது வரலாறு.  


பாக்கிஸ்தான்,  ஈரான் ஈராக்,  ஆப்கானிஸ்தான், ஜெருசலம் என பாலைவன பிரதேசத்தில் வழிப்பறி,கொள்ளை,  கொலை என இருந்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்திய  நல்ல மனிதர்கள்தான் முகமது நபி அவர்களும், யேசு அவர்களும்.  பாலைவன பிரதேசத்தில் அந்நாளில் கொலை, கொள்ளை என ஈடுபட்டமையால்  நிறைய ஆண்கள் உயிரிழக்க நேர்ந்தது,நிறைய பெண்களுடைய வாழ்வு நிராதரவாக நிற்க, பல இளம் பெண்களை மணம் முடிக்க போதிய ஆண்களே இல்லாத நிலையிலேதான் இஸ்லாமியர்கள் பலதார மணம் முடிக்க முகமது நபி அறிவுரை வழங்கியதாக வரலாறு.  


மிளகு,  சீரகம், ஏலக்காய், பட்டை,  கிராம்பு,  லவங்கம்,  வெற்றிலை தாரளமாக,  ஏராளமாக விளைந்த திராவிட நாட்டை தேடி மேற்கத்தியர்கள் கிளம்பிய நிலையில்தான் இந்த உலகத்தினுடைய நீளம்,  அகலமே உலகம் அறிந்து  கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல,  உண்மையும் கூட.

மரேற்கு பாக்கிஸ்தான், கிழக்கு பாக்கிஸ்தான் என இருந்த நாடு வங்க தேசம் என தனி நாடாக பிரிந்த நிலையில், மேற்கு வங்கத்து கவி.ரவிந்திரநாத் தாகூர்,  தேசப்பிதா  காந்தி அவர்களுக்காக  மகாத்மா என்ற பட்டத்தை வழங்கிவருமான தேசிய கவி இயற்றிய தேசிய கீதத்தில் "திராவிட உத்தல வங்கா 'என்ற சொற்றொடர் இன்று வரை நீடிக்கிறது.  இந்திய தேசிய கீதம் எழுதிய ரவீந்திர நாத் தாகூர்தான் வங்க தேசத்திற்கும் தேசிய கீதம் எழுதியவர்.  

பாபர் முதல்,  ஹுமாயுன்,  அக்பர்,  ஜஹாங்கீர், ஷாஜஹன்,  ஒளரங்கசீப் வரை எவரும் எட்டி பார்க்க இயலாத நாடாக இருந்ததுதான் திராவிட நாடு . இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க படாத காலத்தில் தமிழகம்,  கேரளம், கர்நாடகம்,  ஆந்திரம் என அனைத்துமே ஒன்றுபட்ட திராவிட நாடாக இருந்ததுதான்  வரலாறு.  


டி எம். நாயர்,  பனகல் அரசர், தியாகராயர்,  அயோத்திதாசர்,  பெரியார் என திராவிட ஆளுமைகள் வசம் சமூக நீதிக்காக விடிவெள்ளியாக திராவிட நாடு இருந்ததும்,  இருப்பதும்,  இருக்க போவதுமே வரலாறு.  வெல்க திராவிடம்.  


வீ.வைகை சுரேஷ்,தேனி. 


தொடர்புக்கு:- 9677448300. 

No comments:

Post a Comment