திராவிடம் என்றால் சிலருக்கு ஏன் கசக்கிறது ? - வ மு சு நித்தியானந்தம்
1. மக்களை சிந்திக்க வைப்பதால் சிந்திக்க தூண்டுவதால்.
2. மக்களை ஏமாற்றுவது கடினமாவதால்.
3. அனைவரும் சமம் என்பதை மக்கள் உணர தொடங்கியதால்.
4. யாராலும் எதுவும் படிக்க முடியும் என்பதை உணர்ச செய்ததால்.
5. சனாதானத்தை பொய் என்பதை மக்கள் உணர தொடங்கியதால்.
6. இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமலில் வைத்திருப்பதால்.
அதை மேலும் செம்மை படுத்துவதால்.
7. தங்களின் ஆதிக்கத்தையும் கொட்டத்தையும் அடக்கியதால்.
8. மதக்கலவரத்தை மதபிரிவினையை தூண்ட முடியாததால்.
9. கடவுள் நம்பிக்கையாளர்களும் பகுத்தறிவாதியாக இருப்பதால்.
10. எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் பீனீக்சு
பறவையாக தொடர்ந்து எழுவதால்.
11. வலதுசாரி சிந்தனையாளர்களை உடனடியாக மக்கள் தெரிந்து கொள்வதால்.
12. அந்நிய மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதால். மொழி திணிப்பை எதிர்ப்பதால் .
13. மணிபிரளவாள ஊடான மொழி திணிப்பை முறியடித்ததால்.
14. உலகெங்கும் நல்ல பணிகளில் அனைத்து மக்களும் இருப்பதால்.
15. மக்களின் பொருளாதார மேம்பாடு.
16. சுயமரியாதையின் முக்கியத்துவத்தை உணரச் செய்ததால்.
17. பெண்களை சமமாக நடத்துவதால்.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணரச் செய்ததால் .
18. ஜாதியை பின்னொட்டை பெயர்களில் நீக்கியதால்.
19. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பதால்.
20. மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் தருவதால்.
No comments:
Post a Comment