2021 தேர்தலின் ஜெயசூர்யாவாக அண்ணன் ஆ.ராசா களமிறங்கிவிட்டார். சும்மா இருந்த அவரை முதலமைச்சர் பழனிச்சாமி தொட்டு விட்டார். தப்பு பண்ணிட்ட சிங்காரம், தப்பு பண்ணிட்ட என வேட்டையாட கிளம்பிட்டார் அண்ணன் ஆ.ராசா. இதுவரை திமுக தலைவர் கூட ஜெயலலிதா மரணத்திற்கான நீதியை திமுக ஆட்சி பெற்றுத்தரும் என்று தான் சொல்லியிருந்தார். அவரது டார்கெட் ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழ்நாட்டை நாசம் செய்யும் இந்த அடிமை கூட்டத்தை ஒழிப்பதாகவே இருந்தது. இன்னொன்று, திமுக தலைவர், தொடர்ச்சியாக இந்த அடிமை அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார். இதற்கு வெகுநாளாக பதில் சொல்லமுடியாமல் இருந்த பழனிசாமிக்கு யாரோ, வாட்சாப் பார்வெர்டில் சர்காரியா, 2ஜி என அனுப்ப, அதையே அவர் பேச... ஆ.ராசா வாடா வா, இதுக்கு தான் காத்திருக்கிறேன் என தனது ஜெயசூரியா மட்டையை சுழற்ற ஆரம்பித்து இருக்கிறார்.
ஒபி ஷைனியின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கடந்த ஏழு ஆண்டுகளாக கோடை விடுமுறை காலம் உட்பட எல்லா அலுவலக நாளிலும் திறந்த நீதிமன்ற அறையில் காத்திருந்தேன் என தீர்ப்பில் எழுதி இருந்ததையும், வதந்தி, கிசுகிசு, யூகம் இதுதான் 2ஜி என தீர்ப்பில் குறிப்பிட்டப்பட்டிருப்பதையும் ஆ. ராசா விளக்கிவிட்டார். இதற்கு பழனிசாமி அவர்களோ, ஜெயகுமார் அவர்களோ, நேரடியாக பதில் சொல்ல முடியாமல் வழக்கமான சங்கி துதியான வழக்கு மீண்டும் விசாரனைக்கு வரும் என்று பாடுகிறார்கள். அதற்கு ஆ.ராசா பதில் சொல்லிவிட்டார். வரட்டும் நான் பாத்துகிறேன் என்பதே பதில்.
ஆனால், ஆ. ராசா இதோடு நிறுத்தியிருந்தால் பழனிசாமி அண்ட் கோ அமைதியாக இருக்கும். அவரு பொத்திப் பொத்தி பாதுகாத்த, டிக்டிக் சத்தம் வருமா என காதுவைத்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு பழைய மணிக்கூண்டை தொபுக்கடீர்னு போட்டு சல்லிசல்லியாக உடைத்துவிட்டார். இந்த மணிக்கூண்டு டிக்டிக் சத்தத்தை வைத்து ஓட்டு வாங்க நினைத்த பழனிசாமி அண்ட் கோ இந்த அடியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை பாமரனுக்கும் புரியும் வண்ணம் விளக்கியது தான் அந்த அடி. இது நம்ம லிஸ்டுலயே இல்லையேடா என வாய்பிளந்து திமுகவினரே பார்த்தனர் என்பது தான் உண்மை.
ஆ.ராசா ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை இப்படிப்படித்தார்.
அந்தத்தீர்ப்பில், இறந்துபோன ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையாக, ஒரு கொள்ளைக்காரர், அரசியல் சட்டத்தை படுகொலை செய்தவர் என்று பல இடங்களில் சொல்லியிருப்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால், இந்த வழக்கில் நீதிபதி குன்காவினுடைய
தீர்ப்பு என்னவென்றால்,
சசிகலாவிற்கோ, இளவரசிக்கோ,சுதாகரனுக்கோ எந்தவித ரோலும் கிடையாது. எந்தவித ரோலும் கிடையாது என்றால், ஜெயலலிதா திட்டமிட்டு, கொள்ளை என்று சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், சட்டத்திற்குப்புறம்பாக சேர்த்துக் குவித்த சொத்துக்களை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பெயரில் போட்டுவைத்தார்கள். இந்த மூன்று பேரும் அதற்கு உடன்பட்டார்களே தவிர, இதை செய்தது எல்லாம் ஜெயலலிதா என்று நீதிபதி குன்கா தீர்ப்பில் இருக்கிறது.
ஆகையால், எல்லா தவறுகளையும் செய்தது ஜெயலலிதாதான்.
மேலும், எனினும், வழக்கு நடைபெறும் பொழுது, ஜெயலலிதா இறந்துபோய்விட்டதால், இந்த மேல்முறையீடு, அவரைப் பொறுத்தவரை அற்றுப் போய்
விடுகிறது.
ஆக, இந்த வழக்கில் ஜெயலலிதா மட்டுமே குற்றவாளியாக இருந்தால், சிலர் சொல்வதுபோன்று, அந்த வழக்கு அந்த அம்மாவோடு முடிந்து போயிருக்கும்.
ஆனால், அந்த அம்மா சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்
பெயரில் இருக்கும் பொழுது, இவர்களைத் தண்டிக்கும்பொழுது, அதற்கு சுருதியாக, ஆதாரமாக, அதற்கு மூல கர்த்தாவாக இருந்த ஜெயலலிதாவை
விட்டுவிட்டு, அவரைத் தொடாமல், இந்த வழக்கின் தீர்ப்பு வர முடியாது.
அப்படியென்றால், வழக்கு அற்றுப்போனது என்று சொன்னாலும்கூட,எல்லா இடங்களிலும், ஜெயலலிதாதான் குற்றவாளி, ஜெயலலிதாதான் சொத்து
சேர்த்தார்; அப்படி சேர்த்த சொத்துக்களை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பெயரில் எழுதி வைத்தார் என்றுதான் வழக்கின் தீர்ப்பில்
சொல்கிறார்கள்.
இந்த வழக்கின் தீர்ப்பை எழுதி முடித்து விட்டு, இரண்டு நீதிபதிகள் கையெழுத்து போட்டுவிட்டு, நீதிபதி
அமித்தவ ராய், தனியாக ஐந்து பக்கங்களுக்குத் தீர்ப்பு எழுதுகிறார். அந்த ஐந்து பக்கங்களில் சசிகலாவைப்
பற்றியோ, சுதாகரனைப் பற்றியோ, இளவரசியைப் பற்றியோ ஒரு வரிகூட கிடையாது.
“அவர் சொல்ல வருவது எல்லாம்,முதலமைச்சராக அரசியல் சட்டத்தின்படி உறுதி எடுத்துக்கொண்டு,
இவ்வளவு அயோக்கித்தனம் செய்திருக்கிறாயே, அரசியல் சட்டத்தைப்படுகொலை செய்திருக்கிறாயே, அந்தப் புனிதத்தைக் கெடுத்திருக்கிறாயே,உன்மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்திருக்கிறாயே, அரசியல் சட்டத்தின் முகவுரையை அடித்து நொறுக்கியிருக்கிறாயே,
என்னால் தாங்க முடியவில்லை” என்றுதான் அந்த நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஏழாண்டு காலம் 2ஜி வழக்கை நானே நடத்தினேன். ஒரு நாள்கூட வாய்தா வாங்கவில்லை. 14 நாள்கள்
நான் சாட்சிக் கூண்டில் ஏறினேன்.
என்னை சி.பி.அய். 14 நாள்கள் விசாரித்தது. பல கேள்விகளை என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.
1700 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் மேல்மீது ஊழல் குற்றச்சாட்டு. அதற்குப்
பிறகு டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பல அமைச்சர்கள் மேல், லல்லுபிரசாத்யாதவ் மீது, ஜெயலலிதா மீது ஊழல்.என்மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள்.
ஆனால், எந்த வழக்கிலும், ஓ.பி.சைனி ஆச்சரியப்பட்டு, திறந்த நீதிமன்றத்தில் அவரே சொன்னது,
“என்னுடைய வாழ்நாளில்,என்னுடைய நீதிமன்ற பயணத்தில், ஒருகுற்றவாளி, சாட்சிக் கூண்டில் ஏறி,
நான் சாட்சி சொல்ல வருகிறேன் என்று சொல்வது இதுதான் முதல் தடவை.
மீண்டும் உங்களை எச்சரிக்கிறேன் -அதில் ஒன்றும் உங்களுக்குச் சங்கடம் இல்லையே!” என்றார்.
எனக்கு ஒரு சங்கடமும் இல்லை.2ஜியில் நான் செய்ததுதான் சரி என்று சாட்சிக் கூண்டில் ஏறி, சொன்னேன். 14 நாள்கள் சி.பி.அய். என்னை விசாரித்தது.
அதற்குப் பிறகு, அந்த வழக்கின் தீர்ப்பில்,
இது ஜோடிக்கப்பட்ட வழக்கு -இட்டுக் கட்டிய வழக்கு - சரியாகப்படிக்காமல் போடப்பட்ட வழக்கு - யூகம்
- கிசுகிசு - வதந்தி என்று சொல்லி முடிக்கப்பட்ட என்னுடைய வழக்கு எங்கே?
இவ்வளவு பட்டவர்த்தனமாக ஜெயலலிதா மீது உச்சநீதிமன்றம் பல்வேறு கொடூரமான கணைகளைத் தொடுத்து, எதிர்காலத்தில், பொதுவாழ்க்கையில்,
இப்படிப்பட்ட ஒரு தலைவர் வராமல் பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கும்
வழக்கு எங்கே?
என ஆ.ராசா நேற்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கி தீர்ப்பின் நகலையும் தந்தார். ஆ.ராசாவிடம் இருக்கும் நெஞ்சுரம் பெரியாரிடமிருந்து வந்தது. அதனால் தான் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் தமிழ் சமூகத்துக்கு பெரியார் பாணியில் அடித்துச் சொல்லிக்கொடுக்கிறார். ஆ. ராசா நம் காலத்து அதிசய தலைவன்!
- ராஜராஜன் ஆர்.ஜெ
No comments:
Post a Comment